Sunday, March 23, 2014

தமிழ் கருத்துக்கள் ( TAMIL KARUTHUKKAL -15 )

  • ஊனுக்கு முந்து; வேலைக்குப் பிந்து.
  • ஊமையாய் இருந்தால் செவிடும் உண்டு.
  • ஊரார் பண்டம் உமி போல்; தன் பண்டம் தங்கம் போல.
  • ஊர் இருக்கு பிச்சை போட; ஓடு இருக்கு வாங்கிக்கொள்ள.
  • ஊர் உண்டு பிச்சைக்கு, குளம் உண்டு தண்ணீருக்கு.
  • ஊர் எல்லாம் சுற்றி; என் பேர் முக்தி.
  • ஊர் வாயை மூட உலைமுடி இல்லை.
  • எங்கே வெலைஞ்சாலும் காஞ்சிரங்காய் தேங்காயாகுமா?
  • எச்சில் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா?
  • எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு.
  • எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்.
  • எதார்த்தவாதி வெகுசன் விரோதி.
  • எதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம்.
  • எதை அடக்காவிட்டாலும் நாக்கை அடக்க வேண்டும்.
  • எத்தனை புடம் போட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகுமா?
  • எய்தவன் இருக்க அம்பை நோவானேன்?
  • எரிகிற வீட்டில் பிடுங்கினது இலாபம்.
  • எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.
  • எருது நோய் காக்கைக்கு தெரியுமா?
  • எருமை வாங்கும் முன்னே நெய் விலை கூறாதே.
  • எறும்பு ஊற கல்லும் தேயும்.
  • எறும்புந் தன் கையால் எண் சாண்.
  • எலி அழுதால் பூனை விடுமா?
  • எலி இருக்கிற இடத்தில் பாம்பு இருக்கும்.
  • எலி வலை யானாலும் தனி வலை வேண்டும்.
  • ==============>>>>>>  CONTINUED ( தொடர்க )

No comments:

Post a Comment