- தலைவிரி கோலத்தில் கோவிலுக்குப் போனால் கைவிரி கோலம்தான் கைமேல் பலன்.
- கேள்வி கேட்பவனை விட பதிலளிப்பவன் புத்திசாலி. கேள்வியும் கேட்டு பதிலும் சொல்லக்கூடியவன் அதிபுத்திசாலி.
- எல்லாம் வேடிக்கைதான், நமக்கு நடக்காமல் மற்றவர்களுக்கு நாடாகும் வரை.
- தொலைவில் உள்ள உடன்பிறப்பை விட, அருகில் உள்ள அண்டை வீட்டுக்காரன் மேல்.
- இடைவிடாத முயற்சியும் எப்போதும் மலர்ந்த முகமும் அறிவின் அறிகுறிகள்.
- எவன் தனக்குத் தானே அதிபதியாய் உள்ளானோ அவனே சிறந்த மனிதன்.
- ஆசை முடியும் கட்டத்தில்தான் அமைதி பிறக்கிறது.
- ஆசை பேராசையானாலும், அன்பு வெறியானாலும் அமைதி தூர விலகி ஓடும்.
- எவரால் மனித இனத்துக்கு நன்மை ஏற்படுகிறதோ அவரே மனிதரில் சிறந்தவர்.
- கட்சிக் கொடிகளின் நிரலில்தான் நாட்டுப் பற்று புதைக்கபடுகிறது.
- ஒன்றுமில்லாதவன் ஏழை அல்ல அளவுக்கு அதிகமாக ஆசைபடுபவனே ஏழை.
- உலகைத் திருத்த விரும்பினால், முதலில் உன்னைத் திருத்திக் கொள்.
- ஒழுக்கம் இல்லா அழகு, மணம் இல்லா மலராகும்.
- சோம்பனுக்கு இன்று ஒருநாள் கொடுத்தால், அது அடுத்த நாளையும் திருடிக் கொள்ளும்.
- விரோதி உன் குறைகளைப் பிறரிடம் சொல்வான். நண்பன் உன் குறைகளை உன்னிடமே சொல்வான்.
- அழகு அழிந்த போதும், ஒழுக்கம் நிலைக்கும்.
- வேலை செய்வதில் அவசரம் கூடாது இடையில் இளைப்பாறுதல் கூடாது.
- ஒரே எண்ணம் உடையவர்கள் சேர்ந்தால் கடலையும் வற்ற வைக்க முடியும்.
- அறத்துடனும், அமைதியுடனும் இருந்தால் அவனியை வென்று விடலாம்.
- மாபெரும் தியாகங்கள் மூலமாக மட்டுமே சாதனைகளைச் சாதிக்க முடியும்.
- எழும் போது தாங்க வருகின்றவரெல்லாம் விழும் போது தூக்க வருவதில்லை.
- சாக்குக் கூறும் ஆற்றல் பெற்றவன் சாதனை செய்வதற்குத் தகுதியற்றவன்.
- பணிவு என்பது தாழ்மையின் சின்னமல்ல உயர்ந்த பண்பின் அறிகுறி.
- சிக்கனமும், சேமிப்பும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் சிறந்த கருவிகள்.
- நண்பனுக்கு நல்லது செய், நட்பு நிலைக்க பகைவனுக்கும் நல்லது செய், அவனை நண்பனாக்க.
- ==============>>>>>> CONTINUED ( தொடர்க )
No comments:
Post a Comment