Saturday, March 22, 2014

தமிழ் கருத்துக்கள் ( TAMIL KARUTHUKKAL -7 )

  • உழைப்பால் பிழைப்பைத் தேடிக்கொண்டு, பிறரிடம் கை நீட்டாதவன் கடவுளுக்கு மிகவும் பிரியமானவன்.
  • உள்ளத்தில் அன்பு இருந்தால் மட்டும் போதாது அது செயலில் வெளிப்பட வேண்டும்.
  • கோயிலுக்கு தங்கத்தை அளிப்பதை விட ஒரு ஏழையின் வாழ்க்கைக்கு உதவுவது மேலானது.
  • வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்க வேண்டும்.
  • முடிவெடுக்கும் ஆற்றல் உன்னிடம் வளர வளர நீ தேர்ந்தெடுப்பதில் குழப்பம் மறையும்.
  • தனது பசியை அடக்கிக் கொண்டவன், மனித சுபாவத்தையே வெற்றி கொண்டவன்.
  • உழைப்பே உயர்வுக்குத் திறவுகோல் சுறுசுறுப்பே செல்வத்திற்க்குத் திறவுகோல்.
  • மனதை நீ இயக்கினால் ஆற்றல், அது தானாக இயங்கினால் ஆபத்து.
  • பண்பாடு குன்றிய இடத்தில்தான் பகைமை உணர்ச்சி அதிகம் காணப்படும்.
  • நெருக்கமாய் இரு, ஆனால் கீழ்த்தரமாய் ஒருபோதும் இராதே.
  • மன்னிக்கும் குணம் மனிதனுக்கு உயர்வானது அது தர்மத்தை விட பலமடங்கு உயர்வு.
  • நாணயமாக நடப்பவர்கள் ஒளிக்கும் இருளுக்கும் அஞ்சுவதில்லை.
  • சாட்சிக்காரன் காலில் விழுவதை விட, சண்டைக்காரன் காலில் விழுந்து விடலாம்.
  • தகுதிக்கு தக்கவாறு வாழாதவன் வாழ்க்கை தீராத கவலையில் முடியும்.
  • மனிதனின் இதயத்தைத் திறப்பது அவனை அறியாமல் எழும் சிரிப்புதான்.
  • அடக்கமுள்ள மனிதன் தன்னைப் பற்றி பேசிக் கொண்டு திரியமாட்டான்.
  • உடலுக்கு உழைப்பு போன்று உள்ளத்துக்குத் துன்பங்கள் பலத்தைத் தரும்.
  • ஞானிகள் விலகியிருப்பது உலகத்தை வெறுக்க அல்ல, அதனை அறியவேதான்.
  • கடுமையான உழைப்பைத் தவிர வெற்றிக்கு வேறு வழியில்லை.
  • செல்வம் என்பது வருமானத்தைப் பொருத்தல்ல நிர்வாகத் திறமையை பொருத்தது.
  • கண்டிக்கத் தெரியாதவனுக்குக் கருணை காட்டவும் தெரியாது.
  • இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறாயோ அதைப்பற்றி மட்டுமே நினைக்க வேண்டும்.
  • நாளைய தினத்தைக் குறித்து கவலைப்படாதே ஒருநாளும் பிறப்பிப்பதை நீ அறியாயே.
  • மலையளவு சொல்லை விட கடுகளவு செயல் மிகச்சிறந்தது.
  • காலத்தின் மதிப்பை நீ அறிந்திருந்தால் வாழ்வின் மதிப்பையும் அறிந்திருப்பாய்.
  • ==============>>>>>>  CONTINUED ( தொடர்க )

No comments:

Post a Comment