Tuesday, April 29, 2014

தமிழ் கருத்துக்கள் ( TAMIL KARUTHUKKAL -31 )

  • நமக்காகப் பொய் சொல்லுபவன் நமக்கு எதிராகவும் பொய் சொல்லுவான்.
  • சாந்தமாகச் செல்பவன் பாதுகாப்பாகச் செல்கிறான்.
  • மௌனம் சில சமயங்களில் உரத்த குரலைக் கொண்டுள்ளது.
  • முட்டாளும் அவன் பணமும் சீக்கிரமாகவே பிரிகின்றன.
  • துன்பம் உன்னைத் துன்புறுத்தாதவரை, துன்பத்தை நீ துன்புறுத்தாதே.
  • வாழ்க்கை என்ன என்று தெரிந்து கொள்வதற்குள் அதன் அரைப் பகுதி கடந்துவிடுகிறது.
  • எப்படி உடற்பயிற்சி உடம்புக்குத் தேவையோ அப்படியே படிப்பும் மனத்திற்குத் தேவை.
  • இறைவனுக்கு அஞ்சுங்கள் அடுத்தபடியாக இறைவனுக்கு அஞ்சாதவனைக் கண்டு அஞ்சுங்கள்.
  • படிக்க நேரம் ஒதுக்குங்கள். அது அறிவின் ஊற்று!
  • பசி சுவை அறியாது. தூக்கம் சுகமறியாது. காமம் வெட்கமறியாது.
  • வாழ்க்கையின் எதிர்ப்புத் தன்மையை நீக்குவது சகிப்புத் தன்மை என்ற எண்ணெய்.
  • பணம் சேமிப்பது ஊசியால் குழி தோண்டுவது மாதிரி.
  • அதிர்ஷ்டத்தை வார்க்கும் அச்சு அவனவன் கையில் தான் இருக்கிறது.
  • ஒரு நகரத்தின் சிறந்த பாதுகாப்புச் சுவர் என்பது சமாதானமே.
  • கடந்து போன நேரம் ஒருபோதும் திரும்பி வருவதில்லை.
  • தெளிவான குறிக்கோளை நோக்கி முயற்சி செய்.
  • இரக்கமில்லாதவன் நெஞ்சம் இரும்பினும் கொடிது.
  • சரியாக புரிந்துகொள்வதற்கு இருக்கும் இரண்டு எதிரிகள் சினமும், சகிப்புத்தன்மையின்மையும்.
  • ஒரு பாவம் நூறு பாவங்களை அதன் பின்னே இழுத்துச் செல்லும்.
  • அறிவு நம்மை கைவிடும் போது நம்பிக்கையே உதவுகிறது.
  • பெண்ணுக்கு மௌனத்தை விட சிறந்த அணிகலன் வேறில்லை.
  • உன் அயலானை நேசி - ஆனால் வேலியை எடுத்து விடாதே.
  • அறிவு நம்மை கைவிடும் போது நம்பிக்கையே உதவுகிறது.
  • அச்சமும், வெறுப்பும் இல்லாமல் இருப்பவனே அறிஞன் எனக் கருதப்படுகிறான்.
  • உழைக்கும் மனிதனே உயிர் வாழும் உரிமை உடையவன்.
  • ==============>>>>>>  CONTINUED ( தொடர்க )

தமிழ் கருத்துக்கள் ( TAMIL KARUTHUKKAL -30 )

  • மற்றவர்களை அறிந்தவன் படித்தவன். அவனைப் பற்றியே அறிந்தவன் அறிவாளி.
  • தந்தையின் அன்பு சுடுகாடு வரை மட்டும்தான். ஆனால், தாயன்பு என்றென்றும் உள்ளது.
  • மனிதர்கள் அவர்களின் தாயார்களால் உண்டாக்கப்பட்டவர்கள் தான்.
  • செயலற்ற தன்மை உன்னை மாற்றாது. செயல்படும் வேகமே மாற்றும்.
  • திருமணத்திற்கு அழைப்பின் பேரில் செல். சாவுக்கு அழையாவிட்டாலும் செல்.
  • ஒரு துளி மையிலிருந்து பிறக்கும் கருத்துக்கள் பல்லாயிரம் பேரைச் சிந்திக்க வைக்கும்.
  • பெண்களின் உரிமைகளிலெல்லாம் பெரிய உரிமை ஒரு தாயாக இருப்பதுதான்.
  • அழகிய மலர்கள் வயலோரத்தில் நீண்டகாலம் நிலைத்திருக்காது.
  • எவன் ஒருவன் தனித்து அதிகம் நிற்கிறானோ, அவன் தான் மிகப் பலமானமனிதன்.
  • கால்களில் நிற்கும் உழவன் முழங்காலில் மண்டியிட்டு இருக்கும் சான்றோனை விட மேலானவன்.
  •  ஒருவர் தானே ஏமாறுவது மாதிரி, மற்றவரால் மிக அதிகமாக ஏமாற்றப்படவில்லை.
  • அடக்கம் ஒரு ஆபரணம் மாத்திரமல்லாமல், நற்குணத்திற்கு ஒரு காவலன்.
  • ஒருவன் தன் சொந்தத் தனித் தன்மையை விடுத்து, வேறொரு மனிதன் ஆகக் கூடாது.
  • மூட நம்பிக்கை மனவலிமை இல்லாதவர்களின் மதம்.
  • ஒரு வசீகரமான கடுஞ்சொல் ஆயிரம் கேவலங்களுக்குச் சமம்.
  • அவசரத்தில் திருமணம் செய்யின், ஓய்வு நேரத்தில் வருந்த வேண்டும்.
  • தேளுக்கு அதிகாரம் கொடுத்தால், அது நொடிக்கு நொடி கொட்டும்.
  • வாதத்திற்கு மருந்து உண்டு. பிடிவாதத்திற்கு மருந்தில்லை.
  • சிறு சிறு வெட்டுக்கள் தான் பெரிய மரங்களை வீழ்த்துகின்றன.
  • ஒரு நல்லது செய்ய கெட்ட நேரம் என்று ஒன்று எப்போதுமில்லை.
  • அனைத்து பிரச்சனைகளையும் எதிர்கொள்ள, எதையும் தாங்கும் இதயம் வேண்டும்.
  • அதிகம் வைத்திருப்பவன் பணக்காரன் அல்ல. அதிகம் கொடுப்பவனே பணக்காரன்.
  • ஒரு பொய், ஈட்டியை விட ஆழமான காயத்தை உண்டாக்கும்.
  • பிறகு என்பதும், பேசாமலிருப்பதும் இல்லையென்பதற்குச் சமம்.
  • உன்னுடைய தவறுகளை மற்றவர்கள் மிகைப்படுத்துவதற்கு முன்னால் ஒப்புக்கொள்.
  • ==============>>>>>>  CONTINUED ( தொடர்க )

தமிழ் கருத்துக்கள் ( TAMIL KARUTHUKKAL -29 )

  • நேரத்தை தள்ளிப்போடாதே, தாமதங்கள் அபாயமான முடிவைக் கொண்டுள்ளன,
  • நாளைக்கு கொடுக்கக்கூடியதாக இருந்தால் இன்றே கொடுத்துவிடு.
  • விளம்பரத்திற்காக செய்யப்படும் எந்தத் தானமும் தானமல்ல.
  • உன்னில் குற்றங்கள் இருந்தால், அவைகளைக் களையப் பயப்படாதே.
  • ஒரு குழந்தை அதன் தூக்கத்தில் சிரித்தால் தேவதையோடு சிரிக்கிறது.
  • பயத்தினால் பயன் உள்ளது. ஆனால், கோழைத்தனத்துக்கு ஒன்றுமில்லை.
  • குருடன் முடவனைத் தூக்கிக் கொண்டால் இருவரும் முன்னே போகிறார்கள்.
  • காலத்தின் கர்ப்பப் பையில் எதிர்காலம் படுத்துக்கிடக்கிறது.
  • எந்த வீட்டில் குழந்தைகள் இல்லையோ, அந்த வீட்டில் ஒளியில்லை.
  • இன்று செய்ய முடிந்ததை நாளைவரை ஒருபோதும் தள்ளிப்போடாதே.
  • காலத்தை வீணாக்குவது தனைத்தானே கொள்ளையடிப்பதற்கு சமம்.
  • நீதிபதியை விட காலம்தான் உண்மையை வெளிக்கொண்டு வருகிறது.
  • பழமொழி தெரிந்த அறிவாளி, துன்பங்களைச் சமாதானப் படுத்திக் கொள்கிறான்.
  • காலத்தை விட பழிவாங்கக் கூடியது வேறு ஒன்றும் இல்லை.
  • நீ யாரை வேண்டுமானாலும் சந்தேகி. ஆனால் உன்னையேயல்ல.
  • உழைக்க நேரம் ஒதுக்குங்கள், அது வெற்றியின் விலை.
  • மற்றவர்களுடைய வாழ்க்கையோடு ஒப்பிடாமல் உன் சொந்த வாழ்க்கையை அனுபவி.
  • பொறுமையாக இருக்க முடியுமானால் உலகில் உள்ள அனைத்தையும் பெற முடியும்.
  • பயத்தை உன்னிடமே வைத்துக்கொள், உன் துணியைப் பகிர்ந்து கொள்.
  • சிந்தனை செய்யாமல் படிப்பது ஜீரணம் செய்யாமல் உண்ணுவதற்குச் சமம்.
  • செல்வன் சொல்லுக்கு அஞ்சான்; வீரன் போருக்கு அஞ்சான்.
  • பணம் பேசத் தொடங்கினால் உலகம் வாயை மூடிக் கொள்ளும்.
  • தன்னம்பிக்கை பெரியப் பிரயத்தனங்களுக்கு முதல் தேவை.
  • சிறு குடும்பமானால், வேண்டியவை விரைவில் கிடைக்கும்.
  • தியாக வாழ்க்கை கலையின் சிகரம். அது தான் முற்றிலும் உண்மையான மகிழ்ச்சி.
  • ==============>>>>>>  CONTINUED ( தொடர்க )

தமிழ் கருத்துக்கள் ( TAMIL KARUTHUKKAL -28 )

  • அதிகம் பேசுபவர்கள் நல்ல செயல் ஆற்றுபவர்கள் அல்ல.
  • திரும்பத் திரும்பச் சொல்லும் பேச்சு சுவையின்மையும், சலிப்பையும் ஏற்படுத்தும்.
  • மனிதர்களுடைய மனத்தை வசப்படுத்தும் கலைதான் வாக்கு வன்மை.
  • ஏராளமான வாய்ப்புகள் வரும்போது எச்சரிக்கையாக இரு.
  • பூக்கள் என்ற சொற்களை, ஒரு குழந்தையாலும் புரிந்து கொள்ள முடியும்.
  • நூல்களும் நண்பர்களும் குறைவாகவும் தரமாகவும் இருக்க வேண்டும்.
  • உன்னுடைய பழக்கங்களைக் கவனி, அவைகள் உன்னுடைய குணங்கள் ஆகும்.
  • அறிவுள்ள மனிதனுடன் நடப்பவன், அறிவுள்ளவனாக இருப்பான்.
  • ஏகாந்தம் தரிசனம் செய்ய நல்ல இடம். ஆனால், அங்கேயே வசிக்க மோசமான இடம்.
  • நிதானமும், சீரான போக்கும் போட்டியை வெல்லும்.
  • பாதிப் பணக்காரனாகி விட்டால் முழுப் பணக்காரன் ஆவது எளிது.
  • ஒன்றுக்குமே கடன்பட்டிருக்காதவன் எவனோ அவனே செல்வந்தன்.
  • பணமில்லாத ஒரு மனிதன் பாய்மரம் இல்லாத ஒரு கப்பலைப் போல.
  • பணம் சம்பாதிப்பவர் ஒருபோதும் களைப்படையமாட்டார்.
  • பணம் பார்த்து பண்டம் கொள். குணம் பார்த்து பெண்ணைக் கொள்.
  • தைரியப்படுத்துவது ஒருவனுக்குச் செய்யும் உதவியில் மூன்றில் ஒரு பங்கு.
  • குழந்தை ஒரு தேவதை; கால்களே அதன் சிறகுகள்.
  • சட்டத்தின் துணையை நாடுபவன் ஆட்டுக்காகப் பசுவை இழக்கிறான்.
  • கேட்பதினால் ஞானம் வருகிறது. பேசுவதினால் வருத்தம் வருகிறது.
  • குரு குற்றம் செய்கிறவன் அதைப் பற்றியே எல்லாரும் பேசுவதாக நினைக்கிறான்.
  • கொடுத்தவன் ஒருபோதும் நினைவில் வைத்திருக்கக் கூடாது. பெற்றவன் ஒருபோதும் மறக்கக் கூடாது.
  • வாய்ப்பு ஏற்படும் போது உடனடியாக நல்லது செய்து விடுங்கள்.
  • குருடன் குருடனுக்கு வழிகாட்டினால் இருவரும் பள்ளத்தில் தான் வீழ்வார்கள்.
  • காற்றுகளும் அலைகளும் எப்போதும் திறமையான மாலுமிகள் பக்கமே இருக்கின்றன.
  • விளையாட நேரம் ஒதுக்குங்கள். அது இளமையின் இரகசியம்.

தமிழ் கருத்துக்கள் ( TAMIL KARUTHUKKAL -27 )

  • உண்மையைத் தவிர வேறு எதுவுமே அழகில்லை.
  • நலமான உடல் ஆன்மாவின் கோயில், நலிவான உடல் ஆத்மாவின் சிறைச்சாலை.
  • எல்லா உண்மைகளும் சொல்வதற்காக இல்லை.
  • உண்மை சொல்லிக் கெட்டாரும் இல்லை. பொய் சொல்லி வாழ்ந்தாரும் இல்லை.
  • உண்மை பலம் வாய்ந்ததாக இருப்பதால் அது ஜெயிக்கும்.
  • வயிற்றை எளிதில் நிரப்பிவிடலாம். கண்ணையும் மனதையும் திருப்தி செய்வது மிகவும் கடினம்.
  • நீ நிமிடங்களைக் கவனித்துக் கொண்டால், மணி நேரங்கள் அவைகளாகவே கவனித்துக் கொள்ளும்.
  • நம் வாழ்க்கையில் முன்னேறும்பொழுது தான் நம் திறமைகளின் எல்லைகளைக் கற்றுக் கொள்கிறோம்.
  • உயர்வும் நல்லவைகளும் கருவிச் சாதனங்கள் அல்ல. அவைகள் முடிவுகள்.
  • பொறுமை கசக்கும். ஆனால், அதன் பழம் இனிமையானது.
  • பணம் அறிவாளிக்கு தொண்டு புரிகிறது. முட்டாளை ஆட்சி செய்கிறது.
  • பொறுமையும், காலமும், பலத்தையும் உணர்ச்சியையும் விட சிறந்தது.
  • அறியாமையின் குழந்தைதான் தப்பான அபிப்பிராயம்.
  • குறைந்த வார்த்தை மேலான பிரார்த்தனையாகும்.
  • கெட்ட பழக்கங்கள் வருவது எளிது. வந்தபின் கை விடுவது கடினம்.
  • எல்லா பெரிய மனிதர்களும் நடுத்தரக் குடும்பத்திலிருந்து தான் வருகிறார்கள்.
  • கவரச்சிகள் பார்வையை ஈர்க்கின்றன. ஆனால் திறமை ஆத்மாவை வெல்லுகிறது.
  • புத்திசாலித்தனம் குறைந்திருப்பதைவிட பைசா குறைந்து இருப்பது நல்லது.
  • குழைந்தைகாகப் பெற்றோர் வைத்திருக்கும் சிநேகம், அன்பு மாதிரி வேறெதுவுமில்லை.
  • எதிரிக்குப் பதில் அளிக்குமுன் அவனைப் புரிந்து கொள்.
  • நல்ல பழக்கங்கள் வருவது கடினம். வந்தபின் கடைப்பிடிப்பது எளிது.
  • வீம்பு பேசுகிறவன் அழிவான்; வீரியம் பேசுகிறவன் விழுவான்.
  • உன்னுடைய செய்கைகளைக் கவனி, அவைகள் உன்னுடைய பழக்கங்கள் ஆகும்.
  • பொது அறிவு ஒரு உள்ளுணர்வு. அதன் அதிகம் தான் மேதாவித்தனம்.
  • அறிவாளியின் ஒரு நாளைய வாழ்வு, முட்டாளின் ஆயுட்கால வாழ்வுக்குச் சமம்.
  • ==============>>>>>>  CONTINUED ( தொடர்க )

Monday, April 28, 2014

தமிழ் கருத்துக்கள் ( TAMIL KARUTHUKKAL -26 )

  • இயற்கையின் நடையைப் பின்பற்று. அதன் ரகசியம் பொறுமை.
  • உண்மையைத் தரையில் போட்டு அழுத்தினாலும், அது மறுபடியும் எழுந்துவிடும்.
  • ஏழாண்டுகள் ஒரு பொருளை வைத்திரு. அதன் உபயோகத்தை ஒரு நாள் அறிவாய்.
  • தங்கும் கட்டிடம் செங்கற்களால் ஆனது. வீடு இதயங்களால் ஆனது.
  • இன்பத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அது இருமடங்காய்ப் பெருகும்.
  • அறிவுள்ள விமர்சகரைவிட பொது ஜனங்கள் அறிவு உள்ளவர்கள்.
  • மகிழ்ச்சியும் துயரமும் அதிக இடைவெளியில் எப்போதுமில்லை.
  • நாற்பது என்பது இளமையின் முதுமை. ஐம்பது என்பது முதுமையின் இளமை.
  • சொர்கமும் நரகமும் உன்னுடைய இதயத்தில் இருக்கிறது.
  • காலம் தவறிய உண்மை பொய்யைப் போலத் தீயது.
  • பார்க்காமல் எதையும் பருகாதே. படிக்காமல் எதிலும் கையெழுத்துப் போடாதே.
  • மூவர் உண்மையைப் பேசுகிறார்கள் - முட்டாள்கள், குழந்தைகள், குடிகாரர்கள்.
  • இதயம் பேச விரும்பாவிட்டால் கண்கள் பேசும்.
  • சிலர் பாவச் செயல்களினால் உயர்கின்றனர். சிலர் நற்பண்புகளால் வீழ்கின்றனர்.
  • உன்னுடைய மனப்பாங்குதான் உன் உயர்வைத் தீர்மானிக்கும்.
  • தன்னைச் சிதைக்கும் கோடாரிக்கும் வாசனை கொடுக்கும் சந்தனம்.
  • கடவுள், பெற்றோர்கள், ஆசான் இவர்களுக்கு ஒருபோதும் கைமாறு செய்ய முடியாது.
  • சொற்கள் தேனீக்களைப் போல அவைகளில் தேனும் உண்டு. கொடுக்கும் உண்டு.
  • இளமையாயிருக்கும் சமயத்திலேயே சேமிப்பு செய். முதுமையாயிருக்கும் பொது செலவு செய்.
  • அன்பு என்ற பாணியை ஊமைகள் பேசமுடியும். செவிடர்கள் கேட்கவும் புரியவும் செய்ய முடியும்.
  • நேரம் விலை உயர்ந்தது. ஆனால், உண்மை நேரத்தைவிட அதிக விலை உயர்ந்தது.
  • உணர்வதை நாம் செய்வோம். சொல்வதை உணர்வோம்.
  • மெலிந்த சுதந்திரம் கொழுத்த அடிமைத் தனத்தைவிடச் சிறந்தது.
  • சேற்றில் விழுவது ஒன்றும் இழிவு இல்லை. அங்கேயே கிடப்பது தான் இழிவு.
  • கல்வி, அனுபவம், ஞாபக சக்தி இம்மூன்றையும் உன்னிடமிருந்து யாரும் பறிக்க முடியாது.
  • ==============>>>>>>  CONTINUED ( தொடர்க )

தமிழ் கருத்துக்கள் ( TAMIL KARUTHUKKAL -25 )

  • குற்றங்களிலெல்லாம் பெரிய குற்றம் அவைகளை உணராமலிருப்பதுதான்.
  • காக்கையைப் போல் பகிர்ந்துண்ண, மனிதன் பழக்கப் படுத்திக்கொள்ள வேண்டும்.
  • எந்த ஒரு பெரிய காரியமும் ஆர்வமில்லாமல் ஒருபோதும் சாதிக்க முடியாது.
  • விழித்துக்கொண்டிருக்கும் துன்பங்களுக்கு தூக்கம் தான் நல்ல சிகிச்சை.
  • வாழ்க்கை என்ன என்று தெரிந்து கொள்வதற்குள் அதன் அரைப் பகுதி கடந்துவிடுகிறது.
  • மென்மையான சொல் இரும்பு வாசலைத் திறக்கிறது.
  • அன்பு கொடுப்பவரையும், பெறுகிறவரையும் குணமடையச் செய்கிறது.
  • உயர்வும் நல்லவைகளும் கருவிச் சாதனங்கள் அல்ல. அவைகள் முடிவுகள்.
  • மௌனம் சில சமயங்களில் உரத்த குரலைக் கொண்டுள்ளது.
  • ஒவ்வொரு காரியத்திலும் நாம் முடிவைக் கவனிக்க வேண்டும்.
  • ஒரு மனிதன், பார்வையிலிருந்து விலகியிருந்தால் அவனை மறப்பதற்கு அதிக நாள் ஆகாது.
  • அன்பு என்பது முற்றிலும் செலவுகளால் சூழப்பட்ட உணர்ச்சிக் கடல்.
  • மௌனம் விவாதங்களை ஆட்சேபிக்கும் பலம் கொண்டது.
  • உன்னால் முடிந்ததையெல்லாம் செய்துவிட்டு இறைவனிடம் உதவிகேள்.
  • நட்பு மகிழ்ச்சியைப் பெருக்கும். துயரத்தைப் பங்கிட்டுக்கொள்ளும்.
  • நிம்மதியற்ற மனது, அடுத்தடுத்த தவறுகளுக்கு காரணமாகிவிடும்.
  • வலியும், மகிழ்ச்சியும், வெளிச்சமும், இரவும்போல ஒன்றையொன்று அடுத்தடுத்து வரும்.
  • குட்டக் குட்ட குனிபவனும் முட்டாள், குனியக் குனியக் குட்டுபவனும் முட்டாள்.
  • துரதிர்ஷ்டங்கள் எப்பொழுதும் தனிமையில் வருவதில்லை.
  • செவிடனாகப் பாசாங்கு செய். ஆனால், எல்லா மூலைகளிலிருந்தும் கேள்.
  • தொடக்கத்தை விட முடிவைப்பற்றி அதிகமாகச் சிந்தனை செய்யவேண்டும்.
  • துன்பம் உன்னைத் துன்புறுத்தாதவரை, துன்பத்தை நீ துன்புறுத்தாதே.
  • இந்த பூமியில் எஜமானர்களுக்குச் சேவை செய்ய முடியாது.
  • மனிதன் முடிந்ததைச் செய்கிறான், கடவுள் விரும்பியதைச் செய்கிறார்.
  • வாழ்வில் நிறையப் பெற வேண்டுமென்றால், நீ அதிகமாக உழைக்க வேண்டும்.
  • ==============>>>>>>  CONTINUED ( தொடர்க )

தமிழ் கருத்துக்கள் ( TAMIL KARUTHUKKAL -24 )

  • இதயத்தில் இடம் இருக்கிறபோது வீட்டிலும் இடம் இருக்கிறது.
  • இளமை புண்ணியமுமல்ல; முதுமை பாவமுமல்ல.
  • ரகசியம் என்ன ஊட்டுகிறோமோ அதைப் பொறுத்தே மனம் வளர்கிறது.
  • ஒவ்வொரு மனிதனும் அவனுடைய சிலுவையை சுமக்க வேண்டும்.
  • இன்றைய ஒரு மணி நேரம் நாளைய இரண்டு மணி நேரத்துக்குச் சமம்.
  • காயப்படுத்தும் உண்மையைவிட குணப்படுத்தும் பொய்யே மேல்.
  • அடுத்தவர்களின் முட்டாள் தனத்திலிருந்து புத்தி கற்றுக் கொள்.
  • அதிக தூரம் பிரயாணம் செய்பவன் அதிகம் அறிந்து வைத்துள்ளான்.
  • பைசாவைக் கவனித்துக் கொள். ரூபாய்கள் தானாகக் கவனித்துக் கொள்ளும்.
  • பின்னோக்கி வெகுதூரம் பார்ப்பவனே, முன்னோக்கி வெகுதூரம் பார்க்க முடியும்.
  • வாழ்க்கை அனுபவம் இல்லாத எவரும் கல்வி கற்றவராக முடியாது.
  • அரை குறை அறிவு, அரைக்கிணறு தாண்டுவது போன்ற ஆபத்து.
  • அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்.
  • ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்கும் அதிர்ஷ்டத்திற்கு அவன்தான் சிற்பி.
  • வாக்குறுதிகளைப் பொறுத்தமட்டிலும் ஒவ்வொருவரும் கோடீஸ்வரன்.
  • தாய்தான் கடவுள் என்று சிறு குழந்தைகளின் உதடுகளிலும் இதயங்களிலும் இருக்கின்றன.
  • உன்னுடைய சொற்களைக் கவனி, அவைகள் உன்னுடைய செய்கைகள் ஆகும்.
  • தன் உள்ளத்தோடு செய்யும் போராட்டமே உயர்ந்த போராட்டம்.
  • அரை மூடர்களிடமும் அரை ஞானிகளிடமும் தான் பெரிய அபாயம் உள்ளது.
  • மூட நம்பிக்கை பலவீனமான மனங்களின் மதம்.
  • அலட்சியம் என்ற உறைக்குள்தான் தீமை தன் கையைச் சொருகிக் கொண்டிருக்கிறது.
  • தனக்கு அறிவின்மை இருப்பதை உணர்வதே அறிவு தேடுவதற்கு வழி.
  • ஆகாயத்தின் ரத்தினம் சூரியன்; வீட்டின் அலங்காரம் குழந்தை.
  • நாவை அடக்கப் பழகிய குழந்தை விரைவிலேயே பேசக் கற்றுக்கொள்ளும்.
  • தனிமைக்கு ஈடான தோழனை நான் இதுவரை கண்டதில்லை.
  • ==============>>>>>>  CONTINUED ( தொடர்க )

Saturday, April 26, 2014

தமிழ் கருத்துக்கள் ( TAMIL KARUTHUKKAL -23 )

  • பெண் குழந்தை இல்லாதவனுக்கு அன்பைப் பற்றி அறிய முடியாது.
  • ஒரு திருமணத்தை வெற்றியடையச் செய்யவேண்டுமென்றால் இருவர் தேவை.
  • கடமைதான் நம்முடைய தலைவிதியை நிர்ணயிக்கின்றது.
  • மானிடர்களை முழுமையாகத் திருத்த முடியாது. ஆனால் முன்னேறச் செய்யலாம்.
  • மனசாட்சி ஆயிரம் சாட்சிகளுக்கு சமமானது.
  • வெள்ளம் உயர்ந்தால் மலர் உயரும். உள்ளம் உயர்ந்தால் நீ உயர்வாய்.
  • வாழ்நாள் முழுவதும் இன்பமாயிருக்க நாணயமாய் நடந்து கொள்.
  • முறையற்ற வாடகைக்காரனை விட, காலி வீடே மேலானது.
  • இரு மொழிகள் அறிந்தவர் இருவருக்குச் சமமானவர்.
  • நல்ல மனைவியும், தேக ஆரோக்கியமும் மனிதனின் சிறந்த செல்வம்.
  • அநேக உண்மைகள் வேடிக்கைப் பேச்சிலே வெளியாகி விடுகின்றன.
  • நேர்மையுள்ளவர்களிடம் தான் பணிவுமிருக்கும்.
  • கீழ்படிய முடியாதவனுக்கு தலைமை தாங்கவும் முடியாது.
  • நண்பர்களை பற்றி நல்லதே பேசு, விரோதியைப் பற்றி எதையும் பேசாதே.
  • ஒரு நல்ல புத்தகம் தலைசிறந்த ஆன்மாவின் விலைமதிப்பற்ற உயிர் துடிப்பு.
  • அணையை உடைத்துப்போன வெள்ளம், அழுதால் திரும்பி வருமா?
  • ஒரு முறை சேமித்த தொகை, இருமுறை சம்பாதித்த தொகைக்குச் சமமாகும்.
  • அரியும் சிவனும் ஒண்ணு; இதை அறியாதவன் வாயிலே மண்ணு.
  • உணவை அதிகரித்துக் கொண்டால் ஆயுளைக் குறைத்துக் கொள்ள நேரும்.
  • அரைப் பணத்துக்குப் போன கற்பு, ஆயிரம் கொடுத்தாலும் திரும்பாது.
  • எந்த நிறத்தைச் சேர்த்தாலும் கறுப்பின் சொந்தநிறத்தை மாற்ற முடியாது.
  • ஒருவர் அறிவுள்ளவராக இருந்தால் இருவர் வாழலாம்.
  • மூட நம்பிக்கை கடவுளின் மேலுள்ள அர்த்தமற்ற பயம்.
  • போதுமென்று நீ இருந்தால், சுகமாக வாழ போதுமானது உன்னிடம் உள்ளது.
  • சிறிய துன்பங்கள் பேசுகின்றன. பெரிய துன்பங்கள் மௌனமாக இருக்கின்றன.
  • ==============>>>>>>  CONTINUED ( தொடர்க )

Friday, April 25, 2014

தமிழ் கருத்துக்கள் ( TAMIL KARUTHUKKAL -22 )

  • குதிரை குணமறிந்தல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை.
  • குந்தி இருந்து தின்றால் குன்றும் மாளும்.
  • குப்பை உயரும்; கோபுரம் தாழும்.
  • குப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா?
  • குரங்கு கையில் பூமாலை கிடைத்தது போல்.
  • குரங்குக்குப் புத்திசொல்லித் தூக்கணாங்குருவி கூண்டு இழந்தது.
  • குரு இல்லார்க்கு வித்தையுமில்லை; முதல் இல்லார்க்கு ஊதியமில்லை.
  • குரு மொழி கேளாதவனும் தாய் சொல்லுக்கு அடங்காதவனும் சண்டி.
  • குரு மொழி மறந்தோன் திரு அழிந்து அழிவான்.
  • குருட்டுக் கண்ணுக்குக் குறுணி மையிட்டுமென்ன?
  • குரைக்கிற நாய் கடிக்காது. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
  • குறும்பியுள்ள காதும் குற்றமுள்ள நெஞ்சும் குறுகுறு என்குமாம்.
  • பழக்கங்கள் முதலில் ஒட்டடைகள், பின்னர் இரும்பு கம்பிகள்.
  • அறிவாளிகளின் எழுத்துக்கள் தான் நமது சந்ததிகள் திருட முடியாத சொத்து.
  • இதயத்தில் ஒரு வலி இருப்பதைவிட எலும்பில் ஒரு வலி இருப்பது மேல்.
  • ஒவ்வொரு மலையும் பள்ளத்தாக்கைக் கொண்டுள்ளது.
  • உள்ளத்தை உடலுக்கு அடிமைப்படுத்துபவன் மிருகம்.
  • உழைப்பும் நேர்மையும் வெற்றி பெறச் செய்யும் பேராயுதங்கள்.
  • காலம் பொன் போன்றது. கடமை கண் போன்றது.
  • ஆண்டவனின் கோபத்தை எடை போடலாம், அருளை எடை போட முடியாது.
  • அண்டத்தையே சுமக்கிறவனுக்குச் சுண்டைக்காய் என்ன பாரம்?
  • கடவுள் எல்லா இடங்களிலும் இருக்க முடியவில்லை. அதனால்தான் தாய்மார்களை உண்டாக்கினார்.
  • வாழ்க்கை வாழ்வதில் இல்லை. நம் விருப்பத்தில் இருக்கிறது.
  • ஒரு திருடனைப் பிடிக்க வேறு ஒரு திருடனை அமர்த்திக்கொள்.
  • அருமை அறியாதவன் வீட்டுக்குப் போனால் பெருமை குறைந்து போகும்.
  • ==============>>>>>>  CONTINUED ( தொடர்க )

Thursday, April 24, 2014

தமிழ் கருத்துக்கள் ( TAMIL KARUTHUKKAL -21 )

  • காரியமாகும் வரையில் கழுதையானாலும் காலைப்பிடி.
  • காரியம் பெரிதோ வீரியம் பெரிதோ?
  • கார்த்திகைக்குப் பின் மழையும் இல்லை; கர்ணனுக்குப்பின் கொடையும் இல்லை.
  • காற்றில்லாமல் தூசி பறக்குமா?
  • காற்றுள்ள போதே தூற்றிக் கொள்.
  • காலம் அறிந்து பிழைக்காதவன் வால் அறுந்த குரங்கு ஆவான்.
  • காலம் செய்வதை ஞாலம் செய்யாது.
  • காலம் போகும் வார்த்தை நிற்கும்; கப்பல் போகும் துறை சேரும்.
  • காலுக்குதக்க செருப்பும்; கூலிக்குத் தக்க உழைப்பும்.
  • கால் வயிற்றுக் கஞ்சியானாலும் கடன் இல்லா கஞ்சி.
  • காவடியின் பாரம் சுமக்கிறவனுக்குத் தெரியும்.
  • காஞ்சவோலை விழக் குருத்தோலை சிரிப்பது போல.
  • கிட்டாதாயின் வெட்டென மற.
  • கிணற்றுக்குத் தப்பி தீயிலே பாய்வோமா?
  • கிணற்றுத் தவளைக்கு நாட்டு நடப்பு தெரியுமா?
  • கீர்த்தியால் பசி தீருமா? கீறி ஆற்றினால் புண் ஆறும்.
  • குடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்.
  • குடிகாரன் பேச்சு விடிஞ்சாலே போச்சு.
  • குடும்பத்தில் இளையவனும் கூத்தாடியில் கோமாளியும் ஆகாது.
  • குணத்தை மாற்றக் குருவில்லை.
  • குணம் இல்லா வித்தை எல்லாம் பாழ்.
  • குட்டுப்பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்பட வேண்டும்.
  • குலத்தைவிடக் குணமே பெரிது.
  • குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டுவது போல்.
  • குதிரை ஏறாமல் கெட்டது; கடன் கேளாமல் கெட்டது.
  • ==============>>>>>>  CONTINUED ( தொடர்க )

தமிழ் கருத்துக்கள் ( TAMIL KARUTHUKKAL -20 )

  • கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன்.
  • கல்விக்கு இருவர்; களவுக் கொருவர்.
  • கல்வியற்ற இரம்பையைவிட கல்வியறிவுள்ள சாதாரணப் பெண் மேல்.
  • களை பிடுங்காப் பயிர் காற்பயிர். கள்ள மனம் துள்ளும்.
  • கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியு மட்டும் திருடலாம்.
  • கள்ளம் பெரிதோ? காப்பு பெரிதோ!
  • கள்ளைக் குடித்தால் உள்ளதைச் சொல்லுவான்.
  • கஞ்சி கண்ட இடம் கைலாசம்; சோறு கண்ட இடம் சொர்க்கம்.
  • கழுதை அறியுமா கற்பூர வாசனை?
  • கவலை உடையோர்க்குத் கண்ணுறக்கம் வராது.
  • காகம் திட்டி மாடு சாகாது.
  • காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு.
  • காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல்.
  • காக்காயும், நாவிதனும் வாயை மூடமாட்டார்கள் .
  • காசுக்கு ஒரு குதிரையும் வேண்டும்; காற்றைப் போலப் பறக்கவும் வேண்டும்.
  • காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்.
  • காட்டுப் பூனைக்குச் சிவராத்திரி விரதமா?
  • காண ஒரு தடவை; கும்பிட ஒரு தடவையா?
  • காணாமல் கண்ட கம்பங்க்கூழை சிந்தாமல் குடி.
  • காணி ஆசை கோடி கேடு.
  • காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் நிறம்.
  • காயும் கனியும் உண்டானால் கார்த்திகையில் திருமணம்.
  • காய் சுமையைக் கொடி தாங்காதா?
  • காய்த்த மரம் தான் கல்லடி படும்.
  • காய்ந்தும் கெடுத்தது; பெய்தும் கெடுத்தது.
  • ==============>>>>>>  CONTINUED ( தொடர்க )

தமிழ் கருத்துக்கள் ( TAMIL KARUTHUKKAL -19 )

  • கண்ணாலே கண்டாலும் மண்ணாலே மறை.
  • கண்ணிற் பட்டால் கரிக்குமா? புருவத்திற் பட்டால் கரிக்குமா?
  • கண்ணிலே குத்தின விரலை வெட்டியா விடமுடியும்?
  • கனவில் கண்ட பணம் செலவிற்கு உதவுமா?
  • கனிந்த பழம் தானே விழும்.
  • கன்று கூடி களமடிக்க வைக்கோளுமாகாது; செத்தையும் ஆகாது.
  • கப்பற்காரன் வாழ்வு காற்று அடித்தால் போச்சு.
  • கப்பல் ஏறிப் பட்ட கடன் கொட்டை விற்றா விடியும்.
  • கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்.
  • கரணம் தப்பினால் மரணம்.
  • கரிவிற்ற பணம் கருப்பாய் இருக்குமா?
  • கரும்பு கசிக்கிறது வாய்க் குற்றம்.
  • கரும்பு தின்னக் கைக்கூலி வேண்டுமா?
  • கரும்பு ருசி என்று வேரோடு பிடுங்கலாமா?
  • கறையான் புற்று பாம்புக்கு வீடு.
  • கற்கையில் கல்வி கசப்பு; கற்றபின் அதுவே இனிப்பு.
  • கற்பில்லா அழகு; வாசமில்லாப் பூ.
  • கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு.
  • கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு.
  • உலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்.
  • கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பது போல.
  • கல்லடிச் சித்தன் போன வழி; காடுமேடெல்லாம் தவிடுபொடி.
  • கல்லாடம் (நூல்) படித்தவனோடு மல் ஆடாதே.
  • கல்லாதவரே கண்ணில்லாதவர்.
  • கல்லாதார் செல்வத்திலும் கற்றார் வறுமை நலம்.
  • ==============>>>>>>  CONTINUED ( தொடர்க )

தமிழ் கருத்துக்கள் ( TAMIL KARUTHUKKAL -18 )

  • கடல் திடலாகும்; திடல் கடலாகும்.
  • கடல் மீனுக்கு நீச்சுப் பழக்க வேண்டுமா?
  • கடவுளை நம்பினோர் கைவிடப்படார்.
  • கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும்.
  • கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?
  • கடுகு களவும் களவு தான்; கற்பூரம் களவும் களவுதான்.
  • கடுகு போனதைத் தேடுவார்; மலை போறது தெரியாது.
  • கடுங்காற்று மழை கூட்டும்; கடுஞ் சிநேகம் பகை கூட்டும்.
  • கடுஞ் சொல் தயவைக் கெடுக்கும்.
  • கடைந்த மோரிலே குடைந்து வெண்ணெய் எடுக்கிறது.
  • கட்டிக்கொடுத்த சோறும் சொல்லிக் கொடுத்த பொய்யும் எத்தனை நாள் நிற்கும்.
  • கட்டின சேலை பாம்பாய் கடித்ததாம்.
  • கட்டின வீட்டுக்கு எட்டு வக்கணை.
  • கட்டினவனுக்கு ஒரு வீடானால் கட்டாதவனுக்கு பல வீடு.
  • கட்டை உள்ளவரை கஷ்டமுண்டு.
  • கணக்கன் கணக்கறிவான்; தன் கணக்கைத் தான் அறியான்.
  • கணக்கன் கணக்கைத் தின்னாவிடில். கணக்கனை கணக்கு தின்று விடும்.
  • கணக்கறிந்த பிள்ளையிருந்தால் வீட்டில் வழக்குக்குத் குறைவில்லை.
  • கணக்கைப் பார்த்தால் பிணக்கு வரும்.
  • கண் கண்டது கை செய்யும்.
  • கண் குருடு ஆனாலும் நித்திரையில் குறையுமா?
  • கண்களை விற்றுச் சித்திரம் வாங்குதல் போல்.
  • கண்டது சொல்ல வந்திடும் பகை.
  • கண்டதே காட்சி கொண்டதே கோலம்.
  • கண்டால் ஒரு பேச்சு; காணாவிட்டால் ஒரு பேச்சு.
  • ==============>>>>>>  CONTINUED ( தொடர்க )

Tuesday, April 15, 2014

தமிழ் கருத்துக்கள் ( TAMIL KARUTHUKKAL -17 )

  • ஒரு காசு சேத்தா இரு காசு தேறும்.
  • ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி பிரை.
  • ஒரு கை முழம் போடுமா?
  • ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா?
  • ஒரு நன்றி செய்தவரை உள்ள அளவும் நினை.
  • ஒரு நாள் கூத்துக்கு மீசையைச் சிரைக்கவா?
  • ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
  • ஒரு பிள்ளை பெற்றவளுக்கு உறியிலே சோறு.
  • நாலு பிள்ளை பெற்றவளுக்கு நடுத் தெருவிலே ஓடு.
  • ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் சொல்லுதல்.
  • ஒருவனாய் பிறந்தால் தனிமை; இருவராய்ப் பிறந்தால் பகைமை.
  • ஒருவர் அறிந்தால் இரகசியம்; இருவர் அறிந்தால் அம்பலம்.
  • ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் குரு; அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி.
  • ஓடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்கு இலேசு.
  • ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி.
  • ஓட்டை பானையிலும் சர்க்கரை இருக்கும்.
  • ஓர் ஊருக்கு ஒரு வழியா? ஒன்பது வழி.
  • ஓர் ஊர்ப்பேச்சு ஓர் ஊருக்கு ஏச்சு.
  • ஔவை சொல்லுக்கு அச்சம் இல்லை.
  • கங்கையில் மூழ்கினாலும் காக்கை அன்னம் ஆகுமா?
  • கடன் வாங்கிக் கடன் கொடுத்தவனும் கெட்டான்; மரம் ஏறிக் கைவிட்டவனும் கெட்டான்.
  • கடன் வாங்கியும் பட்டினி; கல்யாணம் பண்ணியும் சந்நியாசி.
  • கடலுக்குக் கரை போடுவார் உண்டா?
  • கடலைத் தாண்ட ஆசையுண்டு; கால்வாயைத் தாண்டக் கால் வல்லை.
  • கடல் கொதித்தால் விளாவ நீர் ஏது?
  • ==============>>>>>>  CONTINUED ( தொடர்க )

தமிழ் கருத்துக்கள் ( TAMIL KARUTHUKKAL -16 )

  • எலிக்குத் திண்டாட்டம் பூனைக்குக் கொண்டாட்டம்.
  • எலும்பு கடிக்கிற நாய் இரும்பைக் கடிக்குமா?
  • எல்லார் தலையிலும் எட்டு எழுது; பாவி என் தலையில பத்தெழுத்து.
  • எல்லாத்துக்கும் ஒரு அழுகையாய் அழுதுவிடுங்கள்.
  • எல்லோருக்கும் ஒவ்வொன்று எளிது.
  • எல்லோரும் பல்லக்கு ஏறினால் பல்லக்கைத் தூக்குவது யார்?
  • எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும்.
  • எள் என்கிறதற்கு முன்னே வெண்ணெய் கொண்டு வருகிறான்.
  • எள்ளுக்கு ஏழு உழவு; கொள்ளுக்கு ஓர் உழவு.
  • எழுதா கடன் அழுதால் வருமா?
  • எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.
  • எழுதியவன் ஏட்டை கெடுத்தான்; படித்தவன் பாட்டைக் கெடுத்தான்.
  • எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர்.
  • ஏதென்று கேட்பாருமில்லை; எடுத்துப் பிடிப்பாருமில்லை.
  • ஏன் என்பாரும் இல்லை; எடுத்துப் பார்ப்பாரும் இல்லை.
  • ஏரி நிறைந்தால் கரை கசியும்.
  • ஏர் உழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும்.
  • ஏறச்சொன்னால் எருதுக்குக் கோபம். இறங்கச் சொன்னால் மூடவனுக்குக் கோபம்.
  • ஏழை என்றால் எவருக்கும் எளிது.
  • ஏழை பேச்சு அம்பலம் ஏறாது.
  • ஏவுகிறவனுக்கு வாய்ச்சொல்; செய்கிறவனுக்குத் தலைச்சுமை.
  • ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.
  • ஐயமான காரியத்தைச் செய்தல் ஆகாது.
  • ஐயர் வருகிறவரை அமாவாசை நிற்குமா?
  • ஒத்துமையில்லாக் குடி ஒருமிக்கக் கெடும்.
  • ==============>>>>>>  CONTINUED ( தொடர்க )