Monday, April 28, 2014

தமிழ் கருத்துக்கள் ( TAMIL KARUTHUKKAL -26 )

  • இயற்கையின் நடையைப் பின்பற்று. அதன் ரகசியம் பொறுமை.
  • உண்மையைத் தரையில் போட்டு அழுத்தினாலும், அது மறுபடியும் எழுந்துவிடும்.
  • ஏழாண்டுகள் ஒரு பொருளை வைத்திரு. அதன் உபயோகத்தை ஒரு நாள் அறிவாய்.
  • தங்கும் கட்டிடம் செங்கற்களால் ஆனது. வீடு இதயங்களால் ஆனது.
  • இன்பத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அது இருமடங்காய்ப் பெருகும்.
  • அறிவுள்ள விமர்சகரைவிட பொது ஜனங்கள் அறிவு உள்ளவர்கள்.
  • மகிழ்ச்சியும் துயரமும் அதிக இடைவெளியில் எப்போதுமில்லை.
  • நாற்பது என்பது இளமையின் முதுமை. ஐம்பது என்பது முதுமையின் இளமை.
  • சொர்கமும் நரகமும் உன்னுடைய இதயத்தில் இருக்கிறது.
  • காலம் தவறிய உண்மை பொய்யைப் போலத் தீயது.
  • பார்க்காமல் எதையும் பருகாதே. படிக்காமல் எதிலும் கையெழுத்துப் போடாதே.
  • மூவர் உண்மையைப் பேசுகிறார்கள் - முட்டாள்கள், குழந்தைகள், குடிகாரர்கள்.
  • இதயம் பேச விரும்பாவிட்டால் கண்கள் பேசும்.
  • சிலர் பாவச் செயல்களினால் உயர்கின்றனர். சிலர் நற்பண்புகளால் வீழ்கின்றனர்.
  • உன்னுடைய மனப்பாங்குதான் உன் உயர்வைத் தீர்மானிக்கும்.
  • தன்னைச் சிதைக்கும் கோடாரிக்கும் வாசனை கொடுக்கும் சந்தனம்.
  • கடவுள், பெற்றோர்கள், ஆசான் இவர்களுக்கு ஒருபோதும் கைமாறு செய்ய முடியாது.
  • சொற்கள் தேனீக்களைப் போல அவைகளில் தேனும் உண்டு. கொடுக்கும் உண்டு.
  • இளமையாயிருக்கும் சமயத்திலேயே சேமிப்பு செய். முதுமையாயிருக்கும் பொது செலவு செய்.
  • அன்பு என்ற பாணியை ஊமைகள் பேசமுடியும். செவிடர்கள் கேட்கவும் புரியவும் செய்ய முடியும்.
  • நேரம் விலை உயர்ந்தது. ஆனால், உண்மை நேரத்தைவிட அதிக விலை உயர்ந்தது.
  • உணர்வதை நாம் செய்வோம். சொல்வதை உணர்வோம்.
  • மெலிந்த சுதந்திரம் கொழுத்த அடிமைத் தனத்தைவிடச் சிறந்தது.
  • சேற்றில் விழுவது ஒன்றும் இழிவு இல்லை. அங்கேயே கிடப்பது தான் இழிவு.
  • கல்வி, அனுபவம், ஞாபக சக்தி இம்மூன்றையும் உன்னிடமிருந்து யாரும் பறிக்க முடியாது.
  • ==============>>>>>>  CONTINUED ( தொடர்க )

No comments:

Post a Comment