Tuesday, April 15, 2014

தமிழ் கருத்துக்கள் ( TAMIL KARUTHUKKAL -17 )

  • ஒரு காசு சேத்தா இரு காசு தேறும்.
  • ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி பிரை.
  • ஒரு கை முழம் போடுமா?
  • ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா?
  • ஒரு நன்றி செய்தவரை உள்ள அளவும் நினை.
  • ஒரு நாள் கூத்துக்கு மீசையைச் சிரைக்கவா?
  • ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
  • ஒரு பிள்ளை பெற்றவளுக்கு உறியிலே சோறு.
  • நாலு பிள்ளை பெற்றவளுக்கு நடுத் தெருவிலே ஓடு.
  • ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் சொல்லுதல்.
  • ஒருவனாய் பிறந்தால் தனிமை; இருவராய்ப் பிறந்தால் பகைமை.
  • ஒருவர் அறிந்தால் இரகசியம்; இருவர் அறிந்தால் அம்பலம்.
  • ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் குரு; அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி.
  • ஓடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்கு இலேசு.
  • ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி.
  • ஓட்டை பானையிலும் சர்க்கரை இருக்கும்.
  • ஓர் ஊருக்கு ஒரு வழியா? ஒன்பது வழி.
  • ஓர் ஊர்ப்பேச்சு ஓர் ஊருக்கு ஏச்சு.
  • ஔவை சொல்லுக்கு அச்சம் இல்லை.
  • கங்கையில் மூழ்கினாலும் காக்கை அன்னம் ஆகுமா?
  • கடன் வாங்கிக் கடன் கொடுத்தவனும் கெட்டான்; மரம் ஏறிக் கைவிட்டவனும் கெட்டான்.
  • கடன் வாங்கியும் பட்டினி; கல்யாணம் பண்ணியும் சந்நியாசி.
  • கடலுக்குக் கரை போடுவார் உண்டா?
  • கடலைத் தாண்ட ஆசையுண்டு; கால்வாயைத் தாண்டக் கால் வல்லை.
  • கடல் கொதித்தால் விளாவ நீர் ஏது?
  • ==============>>>>>>  CONTINUED ( தொடர்க )

No comments:

Post a Comment