Thursday, April 24, 2014

தமிழ் கருத்துக்கள் ( TAMIL KARUTHUKKAL -19 )

  • கண்ணாலே கண்டாலும் மண்ணாலே மறை.
  • கண்ணிற் பட்டால் கரிக்குமா? புருவத்திற் பட்டால் கரிக்குமா?
  • கண்ணிலே குத்தின விரலை வெட்டியா விடமுடியும்?
  • கனவில் கண்ட பணம் செலவிற்கு உதவுமா?
  • கனிந்த பழம் தானே விழும்.
  • கன்று கூடி களமடிக்க வைக்கோளுமாகாது; செத்தையும் ஆகாது.
  • கப்பற்காரன் வாழ்வு காற்று அடித்தால் போச்சு.
  • கப்பல் ஏறிப் பட்ட கடன் கொட்டை விற்றா விடியும்.
  • கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்.
  • கரணம் தப்பினால் மரணம்.
  • கரிவிற்ற பணம் கருப்பாய் இருக்குமா?
  • கரும்பு கசிக்கிறது வாய்க் குற்றம்.
  • கரும்பு தின்னக் கைக்கூலி வேண்டுமா?
  • கரும்பு ருசி என்று வேரோடு பிடுங்கலாமா?
  • கறையான் புற்று பாம்புக்கு வீடு.
  • கற்கையில் கல்வி கசப்பு; கற்றபின் அதுவே இனிப்பு.
  • கற்பில்லா அழகு; வாசமில்லாப் பூ.
  • கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு.
  • கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு.
  • உலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்.
  • கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பது போல.
  • கல்லடிச் சித்தன் போன வழி; காடுமேடெல்லாம் தவிடுபொடி.
  • கல்லாடம் (நூல்) படித்தவனோடு மல் ஆடாதே.
  • கல்லாதவரே கண்ணில்லாதவர்.
  • கல்லாதார் செல்வத்திலும் கற்றார் வறுமை நலம்.
  • ==============>>>>>>  CONTINUED ( தொடர்க )

No comments:

Post a Comment