Saturday, April 26, 2014

தமிழ் கருத்துக்கள் ( TAMIL KARUTHUKKAL -23 )

  • பெண் குழந்தை இல்லாதவனுக்கு அன்பைப் பற்றி அறிய முடியாது.
  • ஒரு திருமணத்தை வெற்றியடையச் செய்யவேண்டுமென்றால் இருவர் தேவை.
  • கடமைதான் நம்முடைய தலைவிதியை நிர்ணயிக்கின்றது.
  • மானிடர்களை முழுமையாகத் திருத்த முடியாது. ஆனால் முன்னேறச் செய்யலாம்.
  • மனசாட்சி ஆயிரம் சாட்சிகளுக்கு சமமானது.
  • வெள்ளம் உயர்ந்தால் மலர் உயரும். உள்ளம் உயர்ந்தால் நீ உயர்வாய்.
  • வாழ்நாள் முழுவதும் இன்பமாயிருக்க நாணயமாய் நடந்து கொள்.
  • முறையற்ற வாடகைக்காரனை விட, காலி வீடே மேலானது.
  • இரு மொழிகள் அறிந்தவர் இருவருக்குச் சமமானவர்.
  • நல்ல மனைவியும், தேக ஆரோக்கியமும் மனிதனின் சிறந்த செல்வம்.
  • அநேக உண்மைகள் வேடிக்கைப் பேச்சிலே வெளியாகி விடுகின்றன.
  • நேர்மையுள்ளவர்களிடம் தான் பணிவுமிருக்கும்.
  • கீழ்படிய முடியாதவனுக்கு தலைமை தாங்கவும் முடியாது.
  • நண்பர்களை பற்றி நல்லதே பேசு, விரோதியைப் பற்றி எதையும் பேசாதே.
  • ஒரு நல்ல புத்தகம் தலைசிறந்த ஆன்மாவின் விலைமதிப்பற்ற உயிர் துடிப்பு.
  • அணையை உடைத்துப்போன வெள்ளம், அழுதால் திரும்பி வருமா?
  • ஒரு முறை சேமித்த தொகை, இருமுறை சம்பாதித்த தொகைக்குச் சமமாகும்.
  • அரியும் சிவனும் ஒண்ணு; இதை அறியாதவன் வாயிலே மண்ணு.
  • உணவை அதிகரித்துக் கொண்டால் ஆயுளைக் குறைத்துக் கொள்ள நேரும்.
  • அரைப் பணத்துக்குப் போன கற்பு, ஆயிரம் கொடுத்தாலும் திரும்பாது.
  • எந்த நிறத்தைச் சேர்த்தாலும் கறுப்பின் சொந்தநிறத்தை மாற்ற முடியாது.
  • ஒருவர் அறிவுள்ளவராக இருந்தால் இருவர் வாழலாம்.
  • மூட நம்பிக்கை கடவுளின் மேலுள்ள அர்த்தமற்ற பயம்.
  • போதுமென்று நீ இருந்தால், சுகமாக வாழ போதுமானது உன்னிடம் உள்ளது.
  • சிறிய துன்பங்கள் பேசுகின்றன. பெரிய துன்பங்கள் மௌனமாக இருக்கின்றன.
  • ==============>>>>>>  CONTINUED ( தொடர்க )

No comments:

Post a Comment