Tuesday, April 29, 2014

தமிழ் கருத்துக்கள் ( TAMIL KARUTHUKKAL -28 )

  • அதிகம் பேசுபவர்கள் நல்ல செயல் ஆற்றுபவர்கள் அல்ல.
  • திரும்பத் திரும்பச் சொல்லும் பேச்சு சுவையின்மையும், சலிப்பையும் ஏற்படுத்தும்.
  • மனிதர்களுடைய மனத்தை வசப்படுத்தும் கலைதான் வாக்கு வன்மை.
  • ஏராளமான வாய்ப்புகள் வரும்போது எச்சரிக்கையாக இரு.
  • பூக்கள் என்ற சொற்களை, ஒரு குழந்தையாலும் புரிந்து கொள்ள முடியும்.
  • நூல்களும் நண்பர்களும் குறைவாகவும் தரமாகவும் இருக்க வேண்டும்.
  • உன்னுடைய பழக்கங்களைக் கவனி, அவைகள் உன்னுடைய குணங்கள் ஆகும்.
  • அறிவுள்ள மனிதனுடன் நடப்பவன், அறிவுள்ளவனாக இருப்பான்.
  • ஏகாந்தம் தரிசனம் செய்ய நல்ல இடம். ஆனால், அங்கேயே வசிக்க மோசமான இடம்.
  • நிதானமும், சீரான போக்கும் போட்டியை வெல்லும்.
  • பாதிப் பணக்காரனாகி விட்டால் முழுப் பணக்காரன் ஆவது எளிது.
  • ஒன்றுக்குமே கடன்பட்டிருக்காதவன் எவனோ அவனே செல்வந்தன்.
  • பணமில்லாத ஒரு மனிதன் பாய்மரம் இல்லாத ஒரு கப்பலைப் போல.
  • பணம் சம்பாதிப்பவர் ஒருபோதும் களைப்படையமாட்டார்.
  • பணம் பார்த்து பண்டம் கொள். குணம் பார்த்து பெண்ணைக் கொள்.
  • தைரியப்படுத்துவது ஒருவனுக்குச் செய்யும் உதவியில் மூன்றில் ஒரு பங்கு.
  • குழந்தை ஒரு தேவதை; கால்களே அதன் சிறகுகள்.
  • சட்டத்தின் துணையை நாடுபவன் ஆட்டுக்காகப் பசுவை இழக்கிறான்.
  • கேட்பதினால் ஞானம் வருகிறது. பேசுவதினால் வருத்தம் வருகிறது.
  • குரு குற்றம் செய்கிறவன் அதைப் பற்றியே எல்லாரும் பேசுவதாக நினைக்கிறான்.
  • கொடுத்தவன் ஒருபோதும் நினைவில் வைத்திருக்கக் கூடாது. பெற்றவன் ஒருபோதும் மறக்கக் கூடாது.
  • வாய்ப்பு ஏற்படும் போது உடனடியாக நல்லது செய்து விடுங்கள்.
  • குருடன் குருடனுக்கு வழிகாட்டினால் இருவரும் பள்ளத்தில் தான் வீழ்வார்கள்.
  • காற்றுகளும் அலைகளும் எப்போதும் திறமையான மாலுமிகள் பக்கமே இருக்கின்றன.
  • விளையாட நேரம் ஒதுக்குங்கள். அது இளமையின் இரகசியம்.

No comments:

Post a Comment