Tuesday, April 15, 2014

தமிழ் கருத்துக்கள் ( TAMIL KARUTHUKKAL -16 )

  • எலிக்குத் திண்டாட்டம் பூனைக்குக் கொண்டாட்டம்.
  • எலும்பு கடிக்கிற நாய் இரும்பைக் கடிக்குமா?
  • எல்லார் தலையிலும் எட்டு எழுது; பாவி என் தலையில பத்தெழுத்து.
  • எல்லாத்துக்கும் ஒரு அழுகையாய் அழுதுவிடுங்கள்.
  • எல்லோருக்கும் ஒவ்வொன்று எளிது.
  • எல்லோரும் பல்லக்கு ஏறினால் பல்லக்கைத் தூக்குவது யார்?
  • எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும்.
  • எள் என்கிறதற்கு முன்னே வெண்ணெய் கொண்டு வருகிறான்.
  • எள்ளுக்கு ஏழு உழவு; கொள்ளுக்கு ஓர் உழவு.
  • எழுதா கடன் அழுதால் வருமா?
  • எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.
  • எழுதியவன் ஏட்டை கெடுத்தான்; படித்தவன் பாட்டைக் கெடுத்தான்.
  • எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர்.
  • ஏதென்று கேட்பாருமில்லை; எடுத்துப் பிடிப்பாருமில்லை.
  • ஏன் என்பாரும் இல்லை; எடுத்துப் பார்ப்பாரும் இல்லை.
  • ஏரி நிறைந்தால் கரை கசியும்.
  • ஏர் உழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும்.
  • ஏறச்சொன்னால் எருதுக்குக் கோபம். இறங்கச் சொன்னால் மூடவனுக்குக் கோபம்.
  • ஏழை என்றால் எவருக்கும் எளிது.
  • ஏழை பேச்சு அம்பலம் ஏறாது.
  • ஏவுகிறவனுக்கு வாய்ச்சொல்; செய்கிறவனுக்குத் தலைச்சுமை.
  • ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.
  • ஐயமான காரியத்தைச் செய்தல் ஆகாது.
  • ஐயர் வருகிறவரை அமாவாசை நிற்குமா?
  • ஒத்துமையில்லாக் குடி ஒருமிக்கக் கெடும்.
  • ==============>>>>>>  CONTINUED ( தொடர்க )

No comments:

Post a Comment