Tuesday, April 29, 2014

தமிழ் கருத்துக்கள் ( TAMIL KARUTHUKKAL -31 )

  • நமக்காகப் பொய் சொல்லுபவன் நமக்கு எதிராகவும் பொய் சொல்லுவான்.
  • சாந்தமாகச் செல்பவன் பாதுகாப்பாகச் செல்கிறான்.
  • மௌனம் சில சமயங்களில் உரத்த குரலைக் கொண்டுள்ளது.
  • முட்டாளும் அவன் பணமும் சீக்கிரமாகவே பிரிகின்றன.
  • துன்பம் உன்னைத் துன்புறுத்தாதவரை, துன்பத்தை நீ துன்புறுத்தாதே.
  • வாழ்க்கை என்ன என்று தெரிந்து கொள்வதற்குள் அதன் அரைப் பகுதி கடந்துவிடுகிறது.
  • எப்படி உடற்பயிற்சி உடம்புக்குத் தேவையோ அப்படியே படிப்பும் மனத்திற்குத் தேவை.
  • இறைவனுக்கு அஞ்சுங்கள் அடுத்தபடியாக இறைவனுக்கு அஞ்சாதவனைக் கண்டு அஞ்சுங்கள்.
  • படிக்க நேரம் ஒதுக்குங்கள். அது அறிவின் ஊற்று!
  • பசி சுவை அறியாது. தூக்கம் சுகமறியாது. காமம் வெட்கமறியாது.
  • வாழ்க்கையின் எதிர்ப்புத் தன்மையை நீக்குவது சகிப்புத் தன்மை என்ற எண்ணெய்.
  • பணம் சேமிப்பது ஊசியால் குழி தோண்டுவது மாதிரி.
  • அதிர்ஷ்டத்தை வார்க்கும் அச்சு அவனவன் கையில் தான் இருக்கிறது.
  • ஒரு நகரத்தின் சிறந்த பாதுகாப்புச் சுவர் என்பது சமாதானமே.
  • கடந்து போன நேரம் ஒருபோதும் திரும்பி வருவதில்லை.
  • தெளிவான குறிக்கோளை நோக்கி முயற்சி செய்.
  • இரக்கமில்லாதவன் நெஞ்சம் இரும்பினும் கொடிது.
  • சரியாக புரிந்துகொள்வதற்கு இருக்கும் இரண்டு எதிரிகள் சினமும், சகிப்புத்தன்மையின்மையும்.
  • ஒரு பாவம் நூறு பாவங்களை அதன் பின்னே இழுத்துச் செல்லும்.
  • அறிவு நம்மை கைவிடும் போது நம்பிக்கையே உதவுகிறது.
  • பெண்ணுக்கு மௌனத்தை விட சிறந்த அணிகலன் வேறில்லை.
  • உன் அயலானை நேசி - ஆனால் வேலியை எடுத்து விடாதே.
  • அறிவு நம்மை கைவிடும் போது நம்பிக்கையே உதவுகிறது.
  • அச்சமும், வெறுப்பும் இல்லாமல் இருப்பவனே அறிஞன் எனக் கருதப்படுகிறான்.
  • உழைக்கும் மனிதனே உயிர் வாழும் உரிமை உடையவன்.
  • ==============>>>>>>  CONTINUED ( தொடர்க )