Thursday, April 24, 2014

தமிழ் கருத்துக்கள் ( TAMIL KARUTHUKKAL -18 )

  • கடல் திடலாகும்; திடல் கடலாகும்.
  • கடல் மீனுக்கு நீச்சுப் பழக்க வேண்டுமா?
  • கடவுளை நம்பினோர் கைவிடப்படார்.
  • கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும்.
  • கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?
  • கடுகு களவும் களவு தான்; கற்பூரம் களவும் களவுதான்.
  • கடுகு போனதைத் தேடுவார்; மலை போறது தெரியாது.
  • கடுங்காற்று மழை கூட்டும்; கடுஞ் சிநேகம் பகை கூட்டும்.
  • கடுஞ் சொல் தயவைக் கெடுக்கும்.
  • கடைந்த மோரிலே குடைந்து வெண்ணெய் எடுக்கிறது.
  • கட்டிக்கொடுத்த சோறும் சொல்லிக் கொடுத்த பொய்யும் எத்தனை நாள் நிற்கும்.
  • கட்டின சேலை பாம்பாய் கடித்ததாம்.
  • கட்டின வீட்டுக்கு எட்டு வக்கணை.
  • கட்டினவனுக்கு ஒரு வீடானால் கட்டாதவனுக்கு பல வீடு.
  • கட்டை உள்ளவரை கஷ்டமுண்டு.
  • கணக்கன் கணக்கறிவான்; தன் கணக்கைத் தான் அறியான்.
  • கணக்கன் கணக்கைத் தின்னாவிடில். கணக்கனை கணக்கு தின்று விடும்.
  • கணக்கறிந்த பிள்ளையிருந்தால் வீட்டில் வழக்குக்குத் குறைவில்லை.
  • கணக்கைப் பார்த்தால் பிணக்கு வரும்.
  • கண் கண்டது கை செய்யும்.
  • கண் குருடு ஆனாலும் நித்திரையில் குறையுமா?
  • கண்களை விற்றுச் சித்திரம் வாங்குதல் போல்.
  • கண்டது சொல்ல வந்திடும் பகை.
  • கண்டதே காட்சி கொண்டதே கோலம்.
  • கண்டால் ஒரு பேச்சு; காணாவிட்டால் ஒரு பேச்சு.
  • ==============>>>>>>  CONTINUED ( தொடர்க )

No comments:

Post a Comment