Saturday, March 22, 2014

தமிழ் கருத்துக்கள் ( TAMIL KARUTHUKKAL -8 )

  • தவறு சிறியதாய் இருக்கும் போதே திருத்திக் கொள்.
  • எதிரி யானை போல இருந்தாலும், நீ அவனை எறும்பு போல கருது.
  • நம்முடைய பொருளாதார நிலவரத்துக்கு ஏற்றபடிதான் வாழ வேண்டும்.
  • பெருமையோடு இல்லாமல் பொறுமையோடு இருப்பவளே பெண்.
  • மனிதர்களின் செய்கைகள் நடவடிக்கைகள் ஒரு புத்தகத்தின் முன்னுரையை போன்றது.
  • இளமையில் வேலைக்காரனாக இருந்தால் முதுமையில் எஜமானாக இருக்கலாம்.
  • நம்பிக்கையும், பிரார்த்தனையும் இல்லாத தொழில் வெற்றி பெறாது.
  • பணத்தை இழந்தால் சொற்ப நஷ்டம், நேரத்தை இழந்தால் எல்லாமே நஷ்டம்.
  • அன்பாயிரு அடிமையாயிராதே ஏழையாயிரு கோழையாயிராதே.
  • உழைப்பே ஓய்வுக்குத் திறவுகோல் சுறுசுறுப்பே செல்வத்திற்க்குத் திறவுகோல்.
  • உள்ளத்தோடு போராடுவதே உண்மையான போராட்டம் அதுவே உண்மையான வெற்றியும் கூட.
  • அண்டை வீட்டுக்காரனிடம் அன்பு கொள் ஆனால் வேலியை மட்டும் விலக்கி விடாதே.
  • நம்மை விடச் சிலர் தாழ்ந்தவர் என்று கருதுவது தவறு மட்டுமல்ல, பாவமும் ஆகும்.
  • உனக்கு என்ன தீங்கு நேரிட்டாலும், அது உன் கைகளால் செய்த செயலின் விளைவுகளே.
  • உன்னிடத்தில் இல்லா விட்டால் பட்டினியாயிரு அடுத்தவனிடத்தில் கை ஏந்தாதே.
  • மனிதனுடைய சுபாவங்கள் வெளிப்படுவது பிரச்சனையில் மாத்திரமே.
  • வாழ்க்கை பயணத்தில் நம்முடன் பயணிப்பவர்கள் இன்பம், துன்பம் என்னும் இருவர்.
  • உன் பொறாமையால் மற்றவர்கள் தாழ்வதில்லை நீதான் தாழ்வடைகிறாய்.
  • நீ பெரியவனாக உயரும் போது, மற்றவனை சிறியவனாக நினைத்தால் நீயும் சிறியவன்தான்.
  • அவசியமில்லாததை வாங்கினால் விரைவில் அவசியமானதை விற்க நேரிடும்.
  • பிறர் பாரத்தைத் தாங்கக் கை கொடுத்தால் நம்முடைய பாரம் தானாகவே குறையும்.
  • இன்று நல்லதையே பேசி, நல்லதையே எழுது நாளைய சந்ததி உன்னை பின்பற்றும்.
  •  ஊக்கம் கடனை அடைக்கும். ஏக்கம் அதனை அதிகமாக்கும்.
  • ஆசை பேராசையானாலும் அன்பு வெறியானாலும் அமைதி தூர விலகி விடும்.
  • பாராட்டுவதற்குக் கை குலுக்கியவரை மறந்தாலும் அதை பெருவதற்க்கு கை கொடுத்தவரை மறவாதே.
  • ==============>>>>>>  CONTINUED ( தொடர்க )

No comments:

Post a Comment