Saturday, March 22, 2014

தமிழ் கருத்துக்கள் ( TAMIL KARUTHUKKAL -4 )

  • இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுப்பான்.
  • இமையின் குத்தம் கண்ணுக்குத் தெரியாது.
  • இரக்கப் போனாலும் சிறக்கப் போ.
  • இரண்டு ஓடத்தில் கால் வைக்காதே.
  • இரவல் வாங்கிய உடை வாடை தாங்காது.
  • இராகு திசையில் வாழ்ந்தவனும் இல்லை; இராச திசையில் கெட்டவனும் இல்லை.
  • இராசா மகளானாலும் கொண்டவனுக்கு பெண்டுதான்.
  • இராமனைப்போல் இராசா இருந்தால் அனுமானைப் போல் சேவகனும் இருப்பான்.
  • இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இருக்குமா?
  • இரும்பு அடிக்கிற இடத்தில் ஈக்கு என்ன வேலை?
  • இறுகினால் களி, இளகினால் கூழ்.
  • இறைத்த கிணறு ஊறும்; இறையாத கேணி நாறும்.
  • இலை அறுத்தவன் குலை அறுக்கமாட்டானா?
  • இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.
  • இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான்.
  • இளங்கன்று பயமறியாது. இளமையிற் கல்வி கல் மேல் எழுத்து.
  • இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்.
  • இளமையில் முயற்சி முதுமையில் காக்கும்.
  • இளைத்தவன் பெஞ்சாதி எல்லாருக்கும் மச்சினி.
  • ஈக்கு விடம் தலையில், தேளுக்கு விடம் கொடுக்கில்.
  • ஈட்டி எட்டு முழம் பாயும்; பணம் பாதாளம் மட்டும் பாயும்.
  • ஈட்டுக்கும் பாட்டுக்கும் இருந்தால் எடுகுமரி.
  • ஈயத்தைக் காச்சிக் காதில் ஊத்தினாப் போல.
  • ஈர நாவிற்கு எலும்பில்லை.
  • உடம்பு போனால் போகிறது; கை வந்தால் போதும்.
  • ==============>>>>>>  CONTINUED ( தொடர்க )

No comments:

Post a Comment