Saturday, March 22, 2014

தமிழ் கருத்துக்கள் ( TAMIL KARUTHUKKAL -10)

  • கீழ்ப்படிதல் மட்டுமே, கட்டளையிடுவதற்கான உரிமையை அளிக்கிறது.
  • ஆற்றல் உடையவனாய் இருப்பதை விட, நேர்மை உடையவனாய் இருப்பது மேல்.
  • வெற்றியின் வேர்களை முயற்சி என்னும் மண் தான் பலப்படுத்தும்; மற்றவை பாழ்படுத்தும்.
  • குழந்தைகளுக்கு கீழ்படிதல் முதல் பாடமாக இருக்கட்டும். இரண்டாவது பாடத்தை உன் இஷ்டப்படி கற்றுக் கொடு.
  • நீ கோபம் கொள்ளும் ஒவ்வொரு நிமிடமும் அறுபது விநாடி மகிழ்ச்சியை இழக்கிறாய்.
  • தன் துன்பத்தில் இன்பத்தைத் தேடுபவன் மனிதன் அடுத்தவர் துன்பத்தில் இன்பப்படுபவன் மிருகம்.
  • துயரம் ஒரு மணி நேரத்தை, பத்து மணி நேரமாக்குகிறது.
  • எதையும் புரிந்து கொள்ள வேண்டுமானால் முதலில் மனதை அமைதிப் படுத்த வேண்டும்.
  • ஒவ்வொரு புதிய செயலின் போதும் உங்கள் பழைய எண்ணத்தைப் பயன்படுத்துங்கள்.
  • தைரியமுள்ளவன் அன்பையும், அதிர்ஷ்டத்தையும் நண்பனாக்கிக் கொள்கிறான்.
  • அதிர்ஷ்டத்தினை நம்பி உழைப்பினை மறப்பது முட்டாள் தனம்.
  • வென்றவன் அனைத்திலும் புத்திசாலியல்ல தோற்றவன் அனைத்திலும் முட்டாளல்ல.
  • கோபமாக இருக்கும் போது, கடிதத்திற்க்குக் பதில் எழுதாதே.
  • இனிமையாக பேசினால் இதயங்களை ஈர்க்கலாம் எளிமையாக வாழ்ந்தால் பேராசைகளை நீக்கிடலாம்.
  • உண்மையான நட்பிற்கு முன்னால் கோபம், வெறுப்பு, பகை இவையெல்லாம் ஒன்றுமேயில்லை.
  • இரவு வந்து விட்டால், ஒரு நாத்தீகன் கூட கடவுளைப் பாதி நம்புகிறான்.
  • உழைப்பில்லாமல் எதையும் பெற முடியாது என்பது இயற்கை வகுத்த சட்டமாகும்.
  • கடமையை செய்வதுதான் உனது பணி. அதன் பலன்கள் மீது உனக்கு அதிகாரமில்லை.
  • தனது தாய்நாட்டை நேசிக்காதவன் எதையுமே நேசிக்க முடியாது.
  • பாவம் செய்கின்ற மனிதனுடைய செயல்களே அவனை அழிவுக்கு கொண்டு போகின்றன.
  • சுதந்திரம் தருபவர் முன் அடங்கி இரு; அடக்குபவர் முன் சுதந்திரமாய் இரு.
  • நாட்டுக்காக ஒருவர் உயிர்த்தியாகம் செய்வது நல்லது. அது பெருமை மிக்கது.
  • பிச்சை எடுப்பதைக் காட்டிலும், அதிகம் சிறந்தது அல்ல கடன் வாங்குதல்.
  • மாட்டுப்பொங்கல் தினத்தன்று மாட்டுக்குக் பொங்கலிடாவிடினும் மாட்டை பொங்கலிடாதீர்கள்.
  • உனது வலது கை செய்வதை, இடது கை அறியாமலிருப்பதே தர்மம்.
  • ==============>>>>>>  CONTINUED ( தொடர்க )

No comments:

Post a Comment