Thursday, March 20, 2014

தமிழ் கருத்துக்கள் ( TAMIL KARUTHUKKAL -2 )

  • எதையும் செய்த பிறகு அழுவதை விட அதை செய்யாமல் இருப்பதே நலம்.
  • ஏழைக்கு செய்யும் தொண்டு ஆண்டவனுக்கு செய்யும் தொண்டு.
  • காரியங்களை கடினமாக்குவது சோம்பல் சுலபமாக்குவது உழைப்பு.
  • சிறு சேமிப்பு வீட்டை காக்கும் சிக்கனம் நாட்டை காக்கும்.
  • அதிகம் பேசினால் அமைதியை இழப்பாய் ஆணவப்பேச்சினால் அன்பை இழப்பாய்.
  • சிறந்த பண்பாக கருதப்படுவது பிறர்க்கு கொடுத்து வாழ்வது.
  • நடந்தவை நடந்தவைகளாகவே இருக்கட்டும் நடப்பவை நல்லதாக இருக்கட்டும்.
  • வேகமாக பேசினால் அர்த்தத்தை இழப்பாய் கோபமாக பேசினால் குணத்தை இழப்பாய்.
  • வறுமையை நினைத்து பயந்து விடாதே திறமை இருக்கு மறந்து விடாதே.
  • உன்னிடத்தில் நீ அன்பு கூறுவது போல பிறனிடத்திலும் அன்பு கூறுவாயாக.
  • வறுமையை காட்டி சிறுது தூரம் அந்த பாதையில் நம்மோடு நடப்பவனே நண்பன்.
  • செல்லப் பிள்ளையாக வளர்ப்பதை விட நல்ல பிள்ளையாக வளர்க்க வேண்டும்.
  • யுத்த களத்தில் இரக்கம் காட்டுவது செத்த வீட்டில் சிரித்து மகிழ்வது போல.
  • திக்கற்றவர்க்கு தெய்வமே துணை.
  • நம்முடைய நட்பு யாரோடு இருக்கிறதோ அதற்கேற்பதான் நம் நிலை இருக்கும்.
  • மனிதன் இயற்கையில் நல்லவன்தான் சூழ்நிலை அவனை கெட்டவனாக்குகிறது.
  • உழைக்கும் கரங்களே உருவாக்கும் கரங்கள்.
  • கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்.
  • அளவுக்கு மேலே பணம் வைத்திருந்தால் அவனும் திருடனும் ஒன்றாவான்.
  • பொறுப்புள்ள பெற்றோர்க்கு குடும்பம் சுவையாய் இருக்கும்.
  • ஆபத்து வரும் போது நண்பனையும். வறுமை வரும் போது மனைவியையும் பார்க்க வேண்டும்.
  • வரவுக்கு மேலே செலவு செய்தால் அவனும் குருடனும் ஒன்றாவான்.
  • அறத்தைக் காப்பதும் சொன்ன சொல்லைக் காப்பதும் மேன்மையிலும் மேன்மையாகும்.
  • ஒன்றுபட்டு வாழ்வோம் பாசத்துடன் சேர்ந்தே வாழ்வோம் தேசத்துடன்.
  • களவுக்கு போகும் பொருளை எடுத்து வறுமைக்கு தந்தால் நலமாகும்.
  • ==============>>>>>>  CONTINUED ( தொடர்க )

No comments:

Post a Comment