Sunday, March 23, 2014

தமிழ் கருத்துக்கள் ( TAMIL KARUTHUKKAL -14 )

  • உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை.
  • உடல் ஒருவனுக்குப் பிறந்தது: நாக்கு பலருக்குப் பிறந்தது.
  • உடைத்த சங்கு ஊத்துப் பறியுமா?
  • உடையவன் பாரா வேலை ஒரு முழங் கட்டை.
  • உட்கார்ந்தால் அல்லவா படுக்க வேண்டும்.
  • உடுத்திக் கெட்டான் பார்ப்பான்; உண்டு கெட்டான் வெள்ளாளன்.
  • உண்ட உடம்பிற்கு உறுதி; உழுத புலத்தில் நெல்லு.
  • உண்டு கொழுத்தால் நண்டு வலையில் இராது.
  • உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும்.
  • உத்திராடத்தில் ஒரு பிள்ளையும், ஊர் வாரியில் ஒரு நிலமும்.
  • உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.
  • உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா?
  • உரலில் தலையை விட்ட பிறகு உலக்கைக்கு அஞ்சலாமா?
  • உரலுக்கு ஒரு பக்கம் இடி: மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி.
  • உரல் போய் மத்தளத்திடம் முறையிட்டதாம்.
  • உறவு போகாமல் கெட்டது; கடன் கேட்காமல் கெட்டது.
  • உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கலைவானேன்.
  • உலை வைத்த சந்திலே சாறு காய்ச்சுவது போல்.
  • உலோபிக்கு இரட்டை செலவு.
  • உலோபியிடம் யாசித்தல் கடலில் கேணி வெட்டுவது போல.
  • உளவு இல்லாமல் களவு இல்லை.
  • உள்ளூரிலே ஓணான் பிடிக்காதவன் உடுப்பியிலே போயி உடும்பு பிடிப்பானா?
  • உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை.
  • உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குகூட மிச்சமில்லை.
  • ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனை நட்பு இழுக்கும்.
  • ==============>>>>>>  CONTINUED ( தொடர்க )

No comments:

Post a Comment