Saturday, March 22, 2014

தமிழ் கருத்துக்கள் ( TAMIL KARUTHUKKAL -5 )

  • பத்து ஆனாலும் பதற்றம் வேண்டாம், அஞ்சு ஆனாலும் அவசரம் வேண்டாம்.
  • கடந்த காலத்தை எண்ணாமல் நிகழ்காலத்தை சிந்தனை செய்தலே நல்லது,
  • சித்திரை பின் ஏழு, வைகாசி முன் ஏழு சிக்கலான அக்னி நட்சத்திரம்.
  • பணக்காரனும் தூங்கமாட்டான்; பைத்தியக்காரனும் தூங்கமாட்டான்.
  • வேலைக்காரனாய் இருந்து பழகினால்தான் நீ எஜமான் ஆக தகுதி பெறுவாய்.
  • பாத்திரம் அறிந்து பிச்சை போடு. கோத்திரம் அறிந்து பெண்ணைக் கொடு.
  • பலம் பொருந்திய நூறு கைகளை விட ஒரு நல்ல மூளையே சிறந்தது.
  • மனிதர்கள் மழை தடுக்கி விழுவதில்லை. சின்ன சின்ன கற்கள் தடுக்கியே விழுகின்றனர்.
  • ஆண் பிள்ளையை அடக்கி வளர்க்க வேண்டும்; பெண் பிள்ளையை போற்றி வளர்க்க வேண்டும்.
  • செக்கு உலக்கையை விழுங்கினவனுக்கு சுக்கு கஷாயம் மருந்தாகுமா?
  • மனிதனுக்கு அழகு அவனுடைய நாக்கு இனிய சொற்களை மட்டும் பேசுவது.
  • ஒரே ஒரு கோழை, பத்து தைரியசாலிகளையும் கோழையாக்கி விடுவான்.
  • தலைக்கு மேல் ஓடிய வெள்ளம் சாண் போனால் என்ன? முழம் போனால் என்ன?
  • மனிதனுக்கு மரியாதை அவசியம், மலருக்கு நறுமணம் சொந்தம்.
  • ஈ க்கு விஷம் தலையில், தேளுக்கு விஷம் கொடுக்கில்.
  • தன்னை தானே வெல்பவன், உலகின் தலை சிறந்த வீரனாவான்.
  • மனத் தூய்மையே நேர்மை, மற்றவை எல்லாம் வெறும் கூச்சல்.
  • உடையவன் பொறுத்தாலும், உடையவன் வீடு நாய் பொறுக்காது.
  • மகிழ்ச்சியோடு சுமந்தால் எத்தகைய பாரமும் இலகுவாயிருக்கும்.
  • அறிவுக்குத் தன் வாழ்வை காணிக்கை ஆக்குகிறவன் என்றும் இறப்பதில்லை.
  • மகத்தான சாதனைகள் சாதிக்கப்படுவது வலிமையினால் அல்ல, விடாமுயற்சியினால்.
  • கடைமையும், இந்த நாளுமே நம்முடையது. பயன்களும், எதிர்காலமும் கடவுளுடையது.
  • உழைப்பின்றி உயர்வதாகப் பெருமைப்படாதே, உண்மையான பெருமை உழைப்பில்தான் வருகிறது.
  • மனைவி உனக்காக எதையும் இழப்பாள். எதற்காகவும் உன்னை இழக்கமாட்டாள்.
  • அன்பு ஒரு முதலிடு, எவ்வளவு போடுகின்றாயோ அதற்கேற்ப நயம் பெறுவாய்.
  • ==============>>>>>>  CONTINUED ( தொடர்க )

No comments:

Post a Comment