- எலிக்குத் திண்டாட்டம் பூனைக்குக் கொண்டாட்டம்.
 - எலும்பு கடிக்கிற நாய் இரும்பைக் கடிக்குமா?
 - எல்லார் தலையிலும் எட்டு எழுது; பாவி என் தலையில பத்தெழுத்து.
 - எல்லாத்துக்கும் ஒரு அழுகையாய் அழுதுவிடுங்கள்.
 - எல்லோருக்கும் ஒவ்வொன்று எளிது.
 - எல்லோரும் பல்லக்கு ஏறினால் பல்லக்கைத் தூக்குவது யார்?
 - எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும்.
 - எள் என்கிறதற்கு முன்னே வெண்ணெய் கொண்டு வருகிறான்.
 - எள்ளுக்கு ஏழு உழவு; கொள்ளுக்கு ஓர் உழவு.
 - எழுதா கடன் அழுதால் வருமா?
 - எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.
 - எழுதியவன் ஏட்டை கெடுத்தான்; படித்தவன் பாட்டைக் கெடுத்தான்.
 
- எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர்.
 - ஏதென்று கேட்பாருமில்லை; எடுத்துப் பிடிப்பாருமில்லை.
 - ஏன் என்பாரும் இல்லை; எடுத்துப் பார்ப்பாரும் இல்லை.
 - ஏரி நிறைந்தால் கரை கசியும்.
 - ஏர் உழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும்.
 - ஏறச்சொன்னால் எருதுக்குக் கோபம். இறங்கச் சொன்னால் மூடவனுக்குக் கோபம்.
 - ஏழை என்றால் எவருக்கும் எளிது.
 - ஏழை பேச்சு அம்பலம் ஏறாது.
 - ஏவுகிறவனுக்கு வாய்ச்சொல்; செய்கிறவனுக்குத் தலைச்சுமை.
 - ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.
 - ஐயமான காரியத்தைச் செய்தல் ஆகாது.
 - ஐயர் வருகிறவரை அமாவாசை நிற்குமா?
 - ஒத்துமையில்லாக் குடி ஒருமிக்கக் கெடும்.
 - ==============>>>>>> CONTINUED ( தொடர்க )
 
No comments:
Post a Comment