Monday, April 28, 2014

தமிழ் கருத்துக்கள் ( TAMIL KARUTHUKKAL -24 )

  • இதயத்தில் இடம் இருக்கிறபோது வீட்டிலும் இடம் இருக்கிறது.
  • இளமை புண்ணியமுமல்ல; முதுமை பாவமுமல்ல.
  • ரகசியம் என்ன ஊட்டுகிறோமோ அதைப் பொறுத்தே மனம் வளர்கிறது.
  • ஒவ்வொரு மனிதனும் அவனுடைய சிலுவையை சுமக்க வேண்டும்.
  • இன்றைய ஒரு மணி நேரம் நாளைய இரண்டு மணி நேரத்துக்குச் சமம்.
  • காயப்படுத்தும் உண்மையைவிட குணப்படுத்தும் பொய்யே மேல்.
  • அடுத்தவர்களின் முட்டாள் தனத்திலிருந்து புத்தி கற்றுக் கொள்.
  • அதிக தூரம் பிரயாணம் செய்பவன் அதிகம் அறிந்து வைத்துள்ளான்.
  • பைசாவைக் கவனித்துக் கொள். ரூபாய்கள் தானாகக் கவனித்துக் கொள்ளும்.
  • பின்னோக்கி வெகுதூரம் பார்ப்பவனே, முன்னோக்கி வெகுதூரம் பார்க்க முடியும்.
  • வாழ்க்கை அனுபவம் இல்லாத எவரும் கல்வி கற்றவராக முடியாது.
  • அரை குறை அறிவு, அரைக்கிணறு தாண்டுவது போன்ற ஆபத்து.
  • அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்.
  • ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்கும் அதிர்ஷ்டத்திற்கு அவன்தான் சிற்பி.
  • வாக்குறுதிகளைப் பொறுத்தமட்டிலும் ஒவ்வொருவரும் கோடீஸ்வரன்.
  • தாய்தான் கடவுள் என்று சிறு குழந்தைகளின் உதடுகளிலும் இதயங்களிலும் இருக்கின்றன.
  • உன்னுடைய சொற்களைக் கவனி, அவைகள் உன்னுடைய செய்கைகள் ஆகும்.
  • தன் உள்ளத்தோடு செய்யும் போராட்டமே உயர்ந்த போராட்டம்.
  • அரை மூடர்களிடமும் அரை ஞானிகளிடமும் தான் பெரிய அபாயம் உள்ளது.
  • மூட நம்பிக்கை பலவீனமான மனங்களின் மதம்.
  • அலட்சியம் என்ற உறைக்குள்தான் தீமை தன் கையைச் சொருகிக் கொண்டிருக்கிறது.
  • தனக்கு அறிவின்மை இருப்பதை உணர்வதே அறிவு தேடுவதற்கு வழி.
  • ஆகாயத்தின் ரத்தினம் சூரியன்; வீட்டின் அலங்காரம் குழந்தை.
  • நாவை அடக்கப் பழகிய குழந்தை விரைவிலேயே பேசக் கற்றுக்கொள்ளும்.
  • தனிமைக்கு ஈடான தோழனை நான் இதுவரை கண்டதில்லை.
  • ==============>>>>>>  CONTINUED ( தொடர்க )

No comments:

Post a Comment