- கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன்.
 - கல்விக்கு இருவர்; களவுக் கொருவர்.
 - கல்வியற்ற இரம்பையைவிட கல்வியறிவுள்ள சாதாரணப் பெண் மேல்.
 - களை பிடுங்காப் பயிர் காற்பயிர். கள்ள மனம் துள்ளும்.
 - கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியு மட்டும் திருடலாம்.
 - கள்ளம் பெரிதோ? காப்பு பெரிதோ!
 - கள்ளைக் குடித்தால் உள்ளதைச் சொல்லுவான்.
 - கஞ்சி கண்ட இடம் கைலாசம்; சோறு கண்ட இடம் சொர்க்கம்.
 - கழுதை அறியுமா கற்பூர வாசனை?
 - கவலை உடையோர்க்குத் கண்ணுறக்கம் வராது.
 - காகம் திட்டி மாடு சாகாது.
 - காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு.
 
- காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல்.
 - காக்காயும், நாவிதனும் வாயை மூடமாட்டார்கள் .
 - காசுக்கு ஒரு குதிரையும் வேண்டும்; காற்றைப் போலப் பறக்கவும் வேண்டும்.
 - காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்.
 - காட்டுப் பூனைக்குச் சிவராத்திரி விரதமா?
 - காண ஒரு தடவை; கும்பிட ஒரு தடவையா?
 - காணாமல் கண்ட கம்பங்க்கூழை சிந்தாமல் குடி.
 - காணி ஆசை கோடி கேடு.
 - காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் நிறம்.
 - காயும் கனியும் உண்டானால் கார்த்திகையில் திருமணம்.
 - காய் சுமையைக் கொடி தாங்காதா?
 - காய்த்த மரம் தான் கல்லடி படும்.
 - காய்ந்தும் கெடுத்தது; பெய்தும் கெடுத்தது.
 - ==============>>>>>> CONTINUED ( தொடர்க )
 
No comments:
Post a Comment