Thursday, April 24, 2014

தமிழ் கருத்துக்கள் ( TAMIL KARUTHUKKAL -20 )

  • கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன்.
  • கல்விக்கு இருவர்; களவுக் கொருவர்.
  • கல்வியற்ற இரம்பையைவிட கல்வியறிவுள்ள சாதாரணப் பெண் மேல்.
  • களை பிடுங்காப் பயிர் காற்பயிர். கள்ள மனம் துள்ளும்.
  • கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியு மட்டும் திருடலாம்.
  • கள்ளம் பெரிதோ? காப்பு பெரிதோ!
  • கள்ளைக் குடித்தால் உள்ளதைச் சொல்லுவான்.
  • கஞ்சி கண்ட இடம் கைலாசம்; சோறு கண்ட இடம் சொர்க்கம்.
  • கழுதை அறியுமா கற்பூர வாசனை?
  • கவலை உடையோர்க்குத் கண்ணுறக்கம் வராது.
  • காகம் திட்டி மாடு சாகாது.
  • காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு.
  • காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல்.
  • காக்காயும், நாவிதனும் வாயை மூடமாட்டார்கள் .
  • காசுக்கு ஒரு குதிரையும் வேண்டும்; காற்றைப் போலப் பறக்கவும் வேண்டும்.
  • காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்.
  • காட்டுப் பூனைக்குச் சிவராத்திரி விரதமா?
  • காண ஒரு தடவை; கும்பிட ஒரு தடவையா?
  • காணாமல் கண்ட கம்பங்க்கூழை சிந்தாமல் குடி.
  • காணி ஆசை கோடி கேடு.
  • காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் நிறம்.
  • காயும் கனியும் உண்டானால் கார்த்திகையில் திருமணம்.
  • காய் சுமையைக் கொடி தாங்காதா?
  • காய்த்த மரம் தான் கல்லடி படும்.
  • காய்ந்தும் கெடுத்தது; பெய்தும் கெடுத்தது.
  • ==============>>>>>>  CONTINUED ( தொடர்க )

No comments:

Post a Comment