- குற்றங்களிலெல்லாம் பெரிய குற்றம் அவைகளை உணராமலிருப்பதுதான்.
 - காக்கையைப் போல் பகிர்ந்துண்ண, மனிதன் பழக்கப் படுத்திக்கொள்ள வேண்டும்.
 - எந்த ஒரு பெரிய காரியமும் ஆர்வமில்லாமல் ஒருபோதும் சாதிக்க முடியாது.
 - விழித்துக்கொண்டிருக்கும் துன்பங்களுக்கு தூக்கம் தான் நல்ல சிகிச்சை.
 - வாழ்க்கை என்ன என்று தெரிந்து கொள்வதற்குள் அதன் அரைப் பகுதி கடந்துவிடுகிறது.
 - மென்மையான சொல் இரும்பு வாசலைத் திறக்கிறது.
 - அன்பு கொடுப்பவரையும், பெறுகிறவரையும் குணமடையச் செய்கிறது.
 - உயர்வும் நல்லவைகளும் கருவிச் சாதனங்கள் அல்ல. அவைகள் முடிவுகள்.
 - மௌனம் சில சமயங்களில் உரத்த குரலைக் கொண்டுள்ளது.
 - ஒவ்வொரு காரியத்திலும் நாம் முடிவைக் கவனிக்க வேண்டும்.
 - ஒரு மனிதன், பார்வையிலிருந்து விலகியிருந்தால் அவனை மறப்பதற்கு அதிக நாள் ஆகாது.
 - அன்பு என்பது முற்றிலும் செலவுகளால் சூழப்பட்ட உணர்ச்சிக் கடல்.
 
- மௌனம் விவாதங்களை ஆட்சேபிக்கும் பலம் கொண்டது.
 - உன்னால் முடிந்ததையெல்லாம் செய்துவிட்டு இறைவனிடம் உதவிகேள்.
 - நட்பு மகிழ்ச்சியைப் பெருக்கும். துயரத்தைப் பங்கிட்டுக்கொள்ளும்.
 - நிம்மதியற்ற மனது, அடுத்தடுத்த தவறுகளுக்கு காரணமாகிவிடும்.
 - வலியும், மகிழ்ச்சியும், வெளிச்சமும், இரவும்போல ஒன்றையொன்று அடுத்தடுத்து வரும்.
 - குட்டக் குட்ட குனிபவனும் முட்டாள், குனியக் குனியக் குட்டுபவனும் முட்டாள்.
 - துரதிர்ஷ்டங்கள் எப்பொழுதும் தனிமையில் வருவதில்லை.
 - செவிடனாகப் பாசாங்கு செய். ஆனால், எல்லா மூலைகளிலிருந்தும் கேள்.
 - தொடக்கத்தை விட முடிவைப்பற்றி அதிகமாகச் சிந்தனை செய்யவேண்டும்.
 - துன்பம் உன்னைத் துன்புறுத்தாதவரை, துன்பத்தை நீ துன்புறுத்தாதே.
 - இந்த பூமியில் எஜமானர்களுக்குச் சேவை செய்ய முடியாது.
 - மனிதன் முடிந்ததைச் செய்கிறான், கடவுள் விரும்பியதைச் செய்கிறார்.
 - வாழ்வில் நிறையப் பெற வேண்டுமென்றால், நீ அதிகமாக உழைக்க வேண்டும்.
 - ==============>>>>>> CONTINUED ( தொடர்க )
 
No comments:
Post a Comment