- அதிகம் பேசுபவர்கள் நல்ல செயல் ஆற்றுபவர்கள் அல்ல.
 - திரும்பத் திரும்பச் சொல்லும் பேச்சு சுவையின்மையும், சலிப்பையும் ஏற்படுத்தும்.
 - மனிதர்களுடைய மனத்தை வசப்படுத்தும் கலைதான் வாக்கு வன்மை.
 - ஏராளமான வாய்ப்புகள் வரும்போது எச்சரிக்கையாக இரு.
 - பூக்கள் என்ற சொற்களை, ஒரு குழந்தையாலும் புரிந்து கொள்ள முடியும்.
 - நூல்களும் நண்பர்களும் குறைவாகவும் தரமாகவும் இருக்க வேண்டும்.
 - உன்னுடைய பழக்கங்களைக் கவனி, அவைகள் உன்னுடைய குணங்கள் ஆகும்.
 - அறிவுள்ள மனிதனுடன் நடப்பவன், அறிவுள்ளவனாக இருப்பான்.
 - ஏகாந்தம் தரிசனம் செய்ய நல்ல இடம். ஆனால், அங்கேயே வசிக்க மோசமான இடம்.
 - நிதானமும், சீரான போக்கும் போட்டியை வெல்லும்.
 - பாதிப் பணக்காரனாகி விட்டால் முழுப் பணக்காரன் ஆவது எளிது.
 - ஒன்றுக்குமே கடன்பட்டிருக்காதவன் எவனோ அவனே செல்வந்தன்.
 
- பணமில்லாத ஒரு மனிதன் பாய்மரம் இல்லாத ஒரு கப்பலைப் போல.
 - பணம் சம்பாதிப்பவர் ஒருபோதும் களைப்படையமாட்டார்.
 - பணம் பார்த்து பண்டம் கொள். குணம் பார்த்து பெண்ணைக் கொள்.
 - தைரியப்படுத்துவது ஒருவனுக்குச் செய்யும் உதவியில் மூன்றில் ஒரு பங்கு.
 - குழந்தை ஒரு தேவதை; கால்களே அதன் சிறகுகள்.
 - சட்டத்தின் துணையை நாடுபவன் ஆட்டுக்காகப் பசுவை இழக்கிறான்.
 - கேட்பதினால் ஞானம் வருகிறது. பேசுவதினால் வருத்தம் வருகிறது.
 - குரு குற்றம் செய்கிறவன் அதைப் பற்றியே எல்லாரும் பேசுவதாக நினைக்கிறான்.
 - கொடுத்தவன் ஒருபோதும் நினைவில் வைத்திருக்கக் கூடாது. பெற்றவன் ஒருபோதும் மறக்கக் கூடாது.
 - வாய்ப்பு ஏற்படும் போது உடனடியாக நல்லது செய்து விடுங்கள்.
 - குருடன் குருடனுக்கு வழிகாட்டினால் இருவரும் பள்ளத்தில் தான் வீழ்வார்கள்.
 - காற்றுகளும் அலைகளும் எப்போதும் திறமையான மாலுமிகள் பக்கமே இருக்கின்றன.
 - விளையாட நேரம் ஒதுக்குங்கள். அது இளமையின் இரகசியம்.
 
No comments:
Post a Comment