Friday, April 25, 2014

தமிழ் கருத்துக்கள் ( TAMIL KARUTHUKKAL -22 )

  • குதிரை குணமறிந்தல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை.
  • குந்தி இருந்து தின்றால் குன்றும் மாளும்.
  • குப்பை உயரும்; கோபுரம் தாழும்.
  • குப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா?
  • குரங்கு கையில் பூமாலை கிடைத்தது போல்.
  • குரங்குக்குப் புத்திசொல்லித் தூக்கணாங்குருவி கூண்டு இழந்தது.
  • குரு இல்லார்க்கு வித்தையுமில்லை; முதல் இல்லார்க்கு ஊதியமில்லை.
  • குரு மொழி கேளாதவனும் தாய் சொல்லுக்கு அடங்காதவனும் சண்டி.
  • குரு மொழி மறந்தோன் திரு அழிந்து அழிவான்.
  • குருட்டுக் கண்ணுக்குக் குறுணி மையிட்டுமென்ன?
  • குரைக்கிற நாய் கடிக்காது. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
  • குறும்பியுள்ள காதும் குற்றமுள்ள நெஞ்சும் குறுகுறு என்குமாம்.
  • பழக்கங்கள் முதலில் ஒட்டடைகள், பின்னர் இரும்பு கம்பிகள்.
  • அறிவாளிகளின் எழுத்துக்கள் தான் நமது சந்ததிகள் திருட முடியாத சொத்து.
  • இதயத்தில் ஒரு வலி இருப்பதைவிட எலும்பில் ஒரு வலி இருப்பது மேல்.
  • ஒவ்வொரு மலையும் பள்ளத்தாக்கைக் கொண்டுள்ளது.
  • உள்ளத்தை உடலுக்கு அடிமைப்படுத்துபவன் மிருகம்.
  • உழைப்பும் நேர்மையும் வெற்றி பெறச் செய்யும் பேராயுதங்கள்.
  • காலம் பொன் போன்றது. கடமை கண் போன்றது.
  • ஆண்டவனின் கோபத்தை எடை போடலாம், அருளை எடை போட முடியாது.
  • அண்டத்தையே சுமக்கிறவனுக்குச் சுண்டைக்காய் என்ன பாரம்?
  • கடவுள் எல்லா இடங்களிலும் இருக்க முடியவில்லை. அதனால்தான் தாய்மார்களை உண்டாக்கினார்.
  • வாழ்க்கை வாழ்வதில் இல்லை. நம் விருப்பத்தில் இருக்கிறது.
  • ஒரு திருடனைப் பிடிக்க வேறு ஒரு திருடனை அமர்த்திக்கொள்.
  • அருமை அறியாதவன் வீட்டுக்குப் போனால் பெருமை குறைந்து போகும்.
  • ==============>>>>>>  CONTINUED ( தொடர்க )

No comments:

Post a Comment