Thursday, April 24, 2014

தமிழ் கருத்துக்கள் ( TAMIL KARUTHUKKAL -21 )

  • காரியமாகும் வரையில் கழுதையானாலும் காலைப்பிடி.
  • காரியம் பெரிதோ வீரியம் பெரிதோ?
  • கார்த்திகைக்குப் பின் மழையும் இல்லை; கர்ணனுக்குப்பின் கொடையும் இல்லை.
  • காற்றில்லாமல் தூசி பறக்குமா?
  • காற்றுள்ள போதே தூற்றிக் கொள்.
  • காலம் அறிந்து பிழைக்காதவன் வால் அறுந்த குரங்கு ஆவான்.
  • காலம் செய்வதை ஞாலம் செய்யாது.
  • காலம் போகும் வார்த்தை நிற்கும்; கப்பல் போகும் துறை சேரும்.
  • காலுக்குதக்க செருப்பும்; கூலிக்குத் தக்க உழைப்பும்.
  • கால் வயிற்றுக் கஞ்சியானாலும் கடன் இல்லா கஞ்சி.
  • காவடியின் பாரம் சுமக்கிறவனுக்குத் தெரியும்.
  • காஞ்சவோலை விழக் குருத்தோலை சிரிப்பது போல.
  • கிட்டாதாயின் வெட்டென மற.
  • கிணற்றுக்குத் தப்பி தீயிலே பாய்வோமா?
  • கிணற்றுத் தவளைக்கு நாட்டு நடப்பு தெரியுமா?
  • கீர்த்தியால் பசி தீருமா? கீறி ஆற்றினால் புண் ஆறும்.
  • குடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்.
  • குடிகாரன் பேச்சு விடிஞ்சாலே போச்சு.
  • குடும்பத்தில் இளையவனும் கூத்தாடியில் கோமாளியும் ஆகாது.
  • குணத்தை மாற்றக் குருவில்லை.
  • குணம் இல்லா வித்தை எல்லாம் பாழ்.
  • குட்டுப்பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்பட வேண்டும்.
  • குலத்தைவிடக் குணமே பெரிது.
  • குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டுவது போல்.
  • குதிரை ஏறாமல் கெட்டது; கடன் கேளாமல் கெட்டது.
  • ==============>>>>>>  CONTINUED ( தொடர்க )

No comments:

Post a Comment