- காரியமாகும் வரையில் கழுதையானாலும் காலைப்பிடி.
 - காரியம் பெரிதோ வீரியம் பெரிதோ?
 - கார்த்திகைக்குப் பின் மழையும் இல்லை; கர்ணனுக்குப்பின் கொடையும் இல்லை.
 - காற்றில்லாமல் தூசி பறக்குமா?
 - காற்றுள்ள போதே தூற்றிக் கொள்.
 - காலம் அறிந்து பிழைக்காதவன் வால் அறுந்த குரங்கு ஆவான்.
 - காலம் செய்வதை ஞாலம் செய்யாது.
 - காலம் போகும் வார்த்தை நிற்கும்; கப்பல் போகும் துறை சேரும்.
 - காலுக்குதக்க செருப்பும்; கூலிக்குத் தக்க உழைப்பும்.
 - கால் வயிற்றுக் கஞ்சியானாலும் கடன் இல்லா கஞ்சி.
 - காவடியின் பாரம் சுமக்கிறவனுக்குத் தெரியும்.
 - காஞ்சவோலை விழக் குருத்தோலை சிரிப்பது போல.
 
- கிட்டாதாயின் வெட்டென மற.
 - கிணற்றுக்குத் தப்பி தீயிலே பாய்வோமா?
 - கிணற்றுத் தவளைக்கு நாட்டு நடப்பு தெரியுமா?
 - கீர்த்தியால் பசி தீருமா? கீறி ஆற்றினால் புண் ஆறும்.
 - குடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்.
 - குடிகாரன் பேச்சு விடிஞ்சாலே போச்சு.
 - குடும்பத்தில் இளையவனும் கூத்தாடியில் கோமாளியும் ஆகாது.
 - குணத்தை மாற்றக் குருவில்லை.
 - குணம் இல்லா வித்தை எல்லாம் பாழ்.
 - குட்டுப்பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்பட வேண்டும்.
 - குலத்தைவிடக் குணமே பெரிது.
 - குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டுவது போல்.
 - குதிரை ஏறாமல் கெட்டது; கடன் கேளாமல் கெட்டது.
 - ==============>>>>>> CONTINUED ( தொடர்க )
 
No comments:
Post a Comment