- மற்றவர்களை அறிந்தவன் படித்தவன். அவனைப் பற்றியே அறிந்தவன் அறிவாளி.
 - தந்தையின் அன்பு சுடுகாடு வரை மட்டும்தான். ஆனால், தாயன்பு என்றென்றும் உள்ளது.
 - மனிதர்கள் அவர்களின் தாயார்களால் உண்டாக்கப்பட்டவர்கள் தான்.
 - செயலற்ற தன்மை உன்னை மாற்றாது. செயல்படும் வேகமே மாற்றும்.
 - திருமணத்திற்கு அழைப்பின் பேரில் செல். சாவுக்கு அழையாவிட்டாலும் செல்.
 - ஒரு துளி மையிலிருந்து பிறக்கும் கருத்துக்கள் பல்லாயிரம் பேரைச் சிந்திக்க வைக்கும்.
 - பெண்களின் உரிமைகளிலெல்லாம் பெரிய உரிமை ஒரு தாயாக இருப்பதுதான்.
 - அழகிய மலர்கள் வயலோரத்தில் நீண்டகாலம் நிலைத்திருக்காது.
 - எவன் ஒருவன் தனித்து அதிகம் நிற்கிறானோ, அவன் தான் மிகப் பலமானமனிதன்.
 - கால்களில் நிற்கும் உழவன் முழங்காலில் மண்டியிட்டு இருக்கும் சான்றோனை விட மேலானவன்.
 - ஒருவர் தானே ஏமாறுவது மாதிரி, மற்றவரால் மிக அதிகமாக ஏமாற்றப்படவில்லை.
 - அடக்கம் ஒரு ஆபரணம் மாத்திரமல்லாமல், நற்குணத்திற்கு ஒரு காவலன்.
 
- ஒருவன் தன் சொந்தத் தனித் தன்மையை விடுத்து, வேறொரு மனிதன் ஆகக் கூடாது.
 - மூட நம்பிக்கை மனவலிமை இல்லாதவர்களின் மதம்.
 - ஒரு வசீகரமான கடுஞ்சொல் ஆயிரம் கேவலங்களுக்குச் சமம்.
 - அவசரத்தில் திருமணம் செய்யின், ஓய்வு நேரத்தில் வருந்த வேண்டும்.
 - தேளுக்கு அதிகாரம் கொடுத்தால், அது நொடிக்கு நொடி கொட்டும்.
 - வாதத்திற்கு மருந்து உண்டு. பிடிவாதத்திற்கு மருந்தில்லை.
 - சிறு சிறு வெட்டுக்கள் தான் பெரிய மரங்களை வீழ்த்துகின்றன.
 - ஒரு நல்லது செய்ய கெட்ட நேரம் என்று ஒன்று எப்போதுமில்லை.
 - அனைத்து பிரச்சனைகளையும் எதிர்கொள்ள, எதையும் தாங்கும் இதயம் வேண்டும்.
 - அதிகம் வைத்திருப்பவன் பணக்காரன் அல்ல. அதிகம் கொடுப்பவனே பணக்காரன்.
 - ஒரு பொய், ஈட்டியை விட ஆழமான காயத்தை உண்டாக்கும்.
 - பிறகு என்பதும், பேசாமலிருப்பதும் இல்லையென்பதற்குச் சமம்.
 - உன்னுடைய தவறுகளை மற்றவர்கள் மிகைப்படுத்துவதற்கு முன்னால் ஒப்புக்கொள்.
 - ==============>>>>>> CONTINUED ( தொடர்க )
 
No comments:
Post a Comment