- ஒரு காசு சேத்தா இரு காசு தேறும்.
 - ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி பிரை.
 - ஒரு கை முழம் போடுமா?
 - ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா?
 - ஒரு நன்றி செய்தவரை உள்ள அளவும் நினை.
 - ஒரு நாள் கூத்துக்கு மீசையைச் சிரைக்கவா?
 - ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
 - ஒரு பிள்ளை பெற்றவளுக்கு உறியிலே சோறு.
 - நாலு பிள்ளை பெற்றவளுக்கு நடுத் தெருவிலே ஓடு.
 - ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் சொல்லுதல்.
 - ஒருவனாய் பிறந்தால் தனிமை; இருவராய்ப் பிறந்தால் பகைமை.
 - ஒருவர் அறிந்தால் இரகசியம்; இருவர் அறிந்தால் அம்பலம்.
 
- ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் குரு; அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி.
 - ஓடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்கு இலேசு.
 - ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி.
 - ஓட்டை பானையிலும் சர்க்கரை இருக்கும்.
 - ஓர் ஊருக்கு ஒரு வழியா? ஒன்பது வழி.
 - ஓர் ஊர்ப்பேச்சு ஓர் ஊருக்கு ஏச்சு.
 - ஔவை சொல்லுக்கு அச்சம் இல்லை.
 - கங்கையில் மூழ்கினாலும் காக்கை அன்னம் ஆகுமா?
 - கடன் வாங்கிக் கடன் கொடுத்தவனும் கெட்டான்; மரம் ஏறிக் கைவிட்டவனும் கெட்டான்.
 - கடன் வாங்கியும் பட்டினி; கல்யாணம் பண்ணியும் சந்நியாசி.
 - கடலுக்குக் கரை போடுவார் உண்டா?
 - கடலைத் தாண்ட ஆசையுண்டு; கால்வாயைத் தாண்டக் கால் வல்லை.
 - கடல் கொதித்தால் விளாவ நீர் ஏது?
 - ==============>>>>>> CONTINUED ( தொடர்க )
 
No comments:
Post a Comment