Tuesday, April 29, 2014

தமிழ் கருத்துக்கள் ( TAMIL KARUTHUKKAL -29 )

  • நேரத்தை தள்ளிப்போடாதே, தாமதங்கள் அபாயமான முடிவைக் கொண்டுள்ளன,
  • நாளைக்கு கொடுக்கக்கூடியதாக இருந்தால் இன்றே கொடுத்துவிடு.
  • விளம்பரத்திற்காக செய்யப்படும் எந்தத் தானமும் தானமல்ல.
  • உன்னில் குற்றங்கள் இருந்தால், அவைகளைக் களையப் பயப்படாதே.
  • ஒரு குழந்தை அதன் தூக்கத்தில் சிரித்தால் தேவதையோடு சிரிக்கிறது.
  • பயத்தினால் பயன் உள்ளது. ஆனால், கோழைத்தனத்துக்கு ஒன்றுமில்லை.
  • குருடன் முடவனைத் தூக்கிக் கொண்டால் இருவரும் முன்னே போகிறார்கள்.
  • காலத்தின் கர்ப்பப் பையில் எதிர்காலம் படுத்துக்கிடக்கிறது.
  • எந்த வீட்டில் குழந்தைகள் இல்லையோ, அந்த வீட்டில் ஒளியில்லை.
  • இன்று செய்ய முடிந்ததை நாளைவரை ஒருபோதும் தள்ளிப்போடாதே.
  • காலத்தை வீணாக்குவது தனைத்தானே கொள்ளையடிப்பதற்கு சமம்.
  • நீதிபதியை விட காலம்தான் உண்மையை வெளிக்கொண்டு வருகிறது.
  • பழமொழி தெரிந்த அறிவாளி, துன்பங்களைச் சமாதானப் படுத்திக் கொள்கிறான்.
  • காலத்தை விட பழிவாங்கக் கூடியது வேறு ஒன்றும் இல்லை.
  • நீ யாரை வேண்டுமானாலும் சந்தேகி. ஆனால் உன்னையேயல்ல.
  • உழைக்க நேரம் ஒதுக்குங்கள், அது வெற்றியின் விலை.
  • மற்றவர்களுடைய வாழ்க்கையோடு ஒப்பிடாமல் உன் சொந்த வாழ்க்கையை அனுபவி.
  • பொறுமையாக இருக்க முடியுமானால் உலகில் உள்ள அனைத்தையும் பெற முடியும்.
  • பயத்தை உன்னிடமே வைத்துக்கொள், உன் துணியைப் பகிர்ந்து கொள்.
  • சிந்தனை செய்யாமல் படிப்பது ஜீரணம் செய்யாமல் உண்ணுவதற்குச் சமம்.
  • செல்வன் சொல்லுக்கு அஞ்சான்; வீரன் போருக்கு அஞ்சான்.
  • பணம் பேசத் தொடங்கினால் உலகம் வாயை மூடிக் கொள்ளும்.
  • தன்னம்பிக்கை பெரியப் பிரயத்தனங்களுக்கு முதல் தேவை.
  • சிறு குடும்பமானால், வேண்டியவை விரைவில் கிடைக்கும்.
  • தியாக வாழ்க்கை கலையின் சிகரம். அது தான் முற்றிலும் உண்மையான மகிழ்ச்சி.
  • ==============>>>>>>  CONTINUED ( தொடர்க )

No comments:

Post a Comment