- நேரத்தை தள்ளிப்போடாதே, தாமதங்கள் அபாயமான முடிவைக் கொண்டுள்ளன,
 - நாளைக்கு கொடுக்கக்கூடியதாக இருந்தால் இன்றே கொடுத்துவிடு.
 - விளம்பரத்திற்காக செய்யப்படும் எந்தத் தானமும் தானமல்ல.
 - உன்னில் குற்றங்கள் இருந்தால், அவைகளைக் களையப் பயப்படாதே.
 - ஒரு குழந்தை அதன் தூக்கத்தில் சிரித்தால் தேவதையோடு சிரிக்கிறது.
 - பயத்தினால் பயன் உள்ளது. ஆனால், கோழைத்தனத்துக்கு ஒன்றுமில்லை.
 - குருடன் முடவனைத் தூக்கிக் கொண்டால் இருவரும் முன்னே போகிறார்கள்.
 - காலத்தின் கர்ப்பப் பையில் எதிர்காலம் படுத்துக்கிடக்கிறது.
 - எந்த வீட்டில் குழந்தைகள் இல்லையோ, அந்த வீட்டில் ஒளியில்லை.
 - இன்று செய்ய முடிந்ததை நாளைவரை ஒருபோதும் தள்ளிப்போடாதே.
 - காலத்தை வீணாக்குவது தனைத்தானே கொள்ளையடிப்பதற்கு சமம்.
 - நீதிபதியை விட காலம்தான் உண்மையை வெளிக்கொண்டு வருகிறது.
 
- பழமொழி தெரிந்த அறிவாளி, துன்பங்களைச் சமாதானப் படுத்திக் கொள்கிறான்.
 - காலத்தை விட பழிவாங்கக் கூடியது வேறு ஒன்றும் இல்லை.
 - நீ யாரை வேண்டுமானாலும் சந்தேகி. ஆனால் உன்னையேயல்ல.
 - உழைக்க நேரம் ஒதுக்குங்கள், அது வெற்றியின் விலை.
 - மற்றவர்களுடைய வாழ்க்கையோடு ஒப்பிடாமல் உன் சொந்த வாழ்க்கையை அனுபவி.
 - பொறுமையாக இருக்க முடியுமானால் உலகில் உள்ள அனைத்தையும் பெற முடியும்.
 - பயத்தை உன்னிடமே வைத்துக்கொள், உன் துணியைப் பகிர்ந்து கொள்.
 - சிந்தனை செய்யாமல் படிப்பது ஜீரணம் செய்யாமல் உண்ணுவதற்குச் சமம்.
 - செல்வன் சொல்லுக்கு அஞ்சான்; வீரன் போருக்கு அஞ்சான்.
 - பணம் பேசத் தொடங்கினால் உலகம் வாயை மூடிக் கொள்ளும்.
 - தன்னம்பிக்கை பெரியப் பிரயத்தனங்களுக்கு முதல் தேவை.
 - சிறு குடும்பமானால், வேண்டியவை விரைவில் கிடைக்கும்.
 - தியாக வாழ்க்கை கலையின் சிகரம். அது தான் முற்றிலும் உண்மையான மகிழ்ச்சி.
 - ==============>>>>>> CONTINUED ( தொடர்க )
 
No comments:
Post a Comment