- ஊனுக்கு முந்து; வேலைக்குப் பிந்து.
 - ஊமையாய் இருந்தால் செவிடும் உண்டு.
 - ஊரார் பண்டம் உமி போல்; தன் பண்டம் தங்கம் போல.
 - ஊர் இருக்கு பிச்சை போட; ஓடு இருக்கு வாங்கிக்கொள்ள.
 - ஊர் உண்டு பிச்சைக்கு, குளம் உண்டு தண்ணீருக்கு.
 - ஊர் எல்லாம் சுற்றி; என் பேர் முக்தி.
 - ஊர் வாயை மூட உலைமுடி இல்லை.
 - எங்கே வெலைஞ்சாலும் காஞ்சிரங்காய் தேங்காயாகுமா?
 - எச்சில் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா?
 - எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு.
 - எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்.
 - எதார்த்தவாதி வெகுசன் விரோதி.
 
- எதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம்.
 - எதை அடக்காவிட்டாலும் நாக்கை அடக்க வேண்டும்.
 - எத்தனை புடம் போட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகுமா?
 - எய்தவன் இருக்க அம்பை நோவானேன்?
 - எரிகிற வீட்டில் பிடுங்கினது இலாபம்.
 - எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.
 - எருது நோய் காக்கைக்கு தெரியுமா?
 - எருமை வாங்கும் முன்னே நெய் விலை கூறாதே.
 - எறும்பு ஊற கல்லும் தேயும்.
 - எறும்புந் தன் கையால் எண் சாண்.
 - எலி அழுதால் பூனை விடுமா?
 - எலி இருக்கிற இடத்தில் பாம்பு இருக்கும்.
 - எலி வலை யானாலும் தனி வலை வேண்டும்.
 - ==============>>>>>> CONTINUED ( தொடர்க )
 
No comments:
Post a Comment