- தலைவிரி கோலத்தில் கோவிலுக்குப் போனால் கைவிரி கோலம்தான் கைமேல் பலன்.
 - கேள்வி கேட்பவனை விட பதிலளிப்பவன் புத்திசாலி. கேள்வியும் கேட்டு பதிலும் சொல்லக்கூடியவன் அதிபுத்திசாலி.
 - எல்லாம் வேடிக்கைதான், நமக்கு நடக்காமல் மற்றவர்களுக்கு நாடாகும் வரை.
 - தொலைவில் உள்ள உடன்பிறப்பை விட, அருகில் உள்ள அண்டை வீட்டுக்காரன் மேல்.
 - இடைவிடாத முயற்சியும் எப்போதும் மலர்ந்த முகமும் அறிவின் அறிகுறிகள்.
 - எவன் தனக்குத் தானே அதிபதியாய் உள்ளானோ அவனே சிறந்த மனிதன்.
 - ஆசை முடியும் கட்டத்தில்தான் அமைதி பிறக்கிறது.
 - ஆசை பேராசையானாலும், அன்பு வெறியானாலும் அமைதி தூர விலகி ஓடும்.
 - எவரால் மனித இனத்துக்கு நன்மை ஏற்படுகிறதோ அவரே மனிதரில் சிறந்தவர்.
 - கட்சிக் கொடிகளின் நிரலில்தான் நாட்டுப் பற்று புதைக்கபடுகிறது.
 - ஒன்றுமில்லாதவன் ஏழை அல்ல அளவுக்கு அதிகமாக ஆசைபடுபவனே ஏழை.
 - உலகைத் திருத்த விரும்பினால், முதலில் உன்னைத் திருத்திக் கொள்.
 
- ஒழுக்கம் இல்லா அழகு, மணம் இல்லா மலராகும்.
 - சோம்பனுக்கு இன்று ஒருநாள் கொடுத்தால், அது அடுத்த நாளையும் திருடிக் கொள்ளும்.
 - விரோதி உன் குறைகளைப் பிறரிடம் சொல்வான். நண்பன் உன் குறைகளை உன்னிடமே சொல்வான்.
 - அழகு அழிந்த போதும், ஒழுக்கம் நிலைக்கும்.
 - வேலை செய்வதில் அவசரம் கூடாது இடையில் இளைப்பாறுதல் கூடாது.
 - ஒரே எண்ணம் உடையவர்கள் சேர்ந்தால் கடலையும் வற்ற வைக்க முடியும்.
 - அறத்துடனும், அமைதியுடனும் இருந்தால் அவனியை வென்று விடலாம்.
 - மாபெரும் தியாகங்கள் மூலமாக மட்டுமே சாதனைகளைச் சாதிக்க முடியும்.
 - எழும் போது தாங்க வருகின்றவரெல்லாம் விழும் போது தூக்க வருவதில்லை.
 - சாக்குக் கூறும் ஆற்றல் பெற்றவன் சாதனை செய்வதற்குத் தகுதியற்றவன்.
 - பணிவு என்பது தாழ்மையின் சின்னமல்ல உயர்ந்த பண்பின் அறிகுறி.
 - சிக்கனமும், சேமிப்பும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் சிறந்த கருவிகள்.
 - நண்பனுக்கு நல்லது செய், நட்பு நிலைக்க பகைவனுக்கும் நல்லது செய், அவனை நண்பனாக்க.
 - ==============>>>>>> CONTINUED ( தொடர்க )
 
No comments:
Post a Comment