- நீ பார்ப்பதிலே பாதியை நம்பு; கேட்பதிலே எதையும் நம்பாதே.
 - தவறு செய்தால் ஏற்படும் மன உலைச்சலைவிட அதற்கு மன்னிப்புக் கேட்பதால் ஏற்படும் மன நிறைவு உயர்வானது.
 - துன்பத்தைக் கண்டு பரிதாபப்படுபவன் மனிதன். அந்த துன்பத்தை நீக்குபவன் இறைவன்.
 - நெருப்பு பொறிகள் மேலே பறப்பதைப் போல, மனிதன் கஷ்டப்படவே பிறந்திருக்கிறான்.
 - எல்லா உறவுகளுக்கும் உயிரை நேசிக்கத் தெரியும்; காதலுக்கு மட்டுமே உயிரை சுவாசிக்கத்தெரியும்.
 - ஏழைக்கு இரங்குகிறவன் கடவுளுக்கு கடன் கொடுக்கிறான். அவர் அதை அவனுக்குத் திரும்பப் கொடுப்பார்.
 - ஒற்றுமை எங்கிருக்கிறதோ, அங்கேதான் வெற்றியும் எப்போதும் இருக்கிறது.
 - வறுமை என்பது அவமானமானதல்ல; அது நன்மை உருவாக்கக்கூடியப் பாடங்கள்.
 - வாயும், கையும் சுத்தமாக இருந்தால் உலகம் முழுவதும் செல்லலாம்.
 - தாலி என்பது வங்கியில் வைத்து பாதுகாக்கப்பட வேண்டியதல்ல. தினமும் நெஞ்சத் தொட்டு பூசிக்கப்பட வேண்டியது.
 - துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; கடவுளின் ராஜ்யம் அவர்களுடையதே.
 - இறைவன் யாரை நேசிக்கிறாரோ, அவரைத் தண்டிக்கிறார்.
 
- ஏழையாகவும் இருந்து, சுதந்திரமாகவும் இருப்பது என்பது முடியாத காரியம்.
 - தாய்த்தமிழை மறைத்தவன் பெற்று எடுத்த பிள்ளைக்கு முறையான தந்தை ஆகமாட்டான்.
 - மனிதா, நீ வணங்கும்படி சில விலங்குகள் நடக்கின்றன: ஆனால், விலங்குகள் வணங்கும்படி நீ நடந்ததுண்டா?
 - உனது லட்சியத்தை அடையும் வரை போராடு; உதவி கேட்டும் பெறாதவர்களுக்கே, உதவி செய்.
 - அர்த்தமற்ற, கண்டறியாத புதுப் பெயர்களைவிட, பழைய அழகுதமிழ் பெயர்களே மேல்.
 - உண்மையைப் பேசி உத்தமனாக வாழ்!
 - முட்டாள் கூட மௌனமாக இருக்கும் போது அறிவாளி என மதிக்கப்படுகிறான்.
 - பெண் சுதந்திரம் என்பது கட்டறுத்து ஓடும் காளையல்ல கட்டுக்குள் இல்லாமல் பட்டிக்குள் நிற்கும் பசு.
 - அன்பு செலுத்துபவனை அடக்கி ஆள முடியாது; அடக்கி ஆள்பவனையும் அன்பினால் வெல்லலாம்.
 - உள்ளங்கள் பொங்க, உணர்வுகள் பொங்க, மகிழ்ச்சி பொங்கும்.
 - அன்று செய்தால் என்றோ என்பது அந்தக்காலம்: இன்று செய்தால் இன்றே என்பது இந்தக்காலம்.
 - தவறுகள் செய்யும் போது மனச்சாட்சி தெரிவதில்லை: தவறுகள் தெரியும் போது மனச்சாட்சி விடுவதில்லை.
 - ஏமாற்றுவது கெட்டித்தனமல்ல, பெறும் நம்பிக்கைத்துரோகம்.
 - ==============>>>>>> CONTINUED ( தொடர்க )
 
No comments:
Post a Comment