- இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுப்பான்.
 - இமையின் குத்தம் கண்ணுக்குத் தெரியாது.
 - இரக்கப் போனாலும் சிறக்கப் போ.
 - இரண்டு ஓடத்தில் கால் வைக்காதே.
 - இரவல் வாங்கிய உடை வாடை தாங்காது.
 - இராகு திசையில் வாழ்ந்தவனும் இல்லை; இராச திசையில் கெட்டவனும் இல்லை.
 - இராசா மகளானாலும் கொண்டவனுக்கு பெண்டுதான்.
 - இராமனைப்போல் இராசா இருந்தால் அனுமானைப் போல் சேவகனும் இருப்பான்.
 - இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இருக்குமா?
 - இரும்பு அடிக்கிற இடத்தில் ஈக்கு என்ன வேலை?
 - இறுகினால் களி, இளகினால் கூழ்.
 - இறைத்த கிணறு ஊறும்; இறையாத கேணி நாறும்.
 
- இலை அறுத்தவன் குலை அறுக்கமாட்டானா?
 - இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.
 - இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான்.
 - இளங்கன்று பயமறியாது. இளமையிற் கல்வி கல் மேல் எழுத்து.
 - இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்.
 - இளமையில் முயற்சி முதுமையில் காக்கும்.
 - இளைத்தவன் பெஞ்சாதி எல்லாருக்கும் மச்சினி.
 - ஈக்கு விடம் தலையில், தேளுக்கு விடம் கொடுக்கில்.
 - ஈட்டி எட்டு முழம் பாயும்; பணம் பாதாளம் மட்டும் பாயும்.
 - ஈட்டுக்கும் பாட்டுக்கும் இருந்தால் எடுகுமரி.
 - ஈயத்தைக் காச்சிக் காதில் ஊத்தினாப் போல.
 - ஈர நாவிற்கு எலும்பில்லை.
 - உடம்பு போனால் போகிறது; கை வந்தால் போதும்.
 - ==============>>>>>> CONTINUED ( தொடர்க )
 
No comments:
Post a Comment