- இன்று செய்யவேண்டியதை, நாளை என்று தள்ளிப்போடாதே!
 - கோபம் அறிவீனத்தில் தொடங்கித் துக்கத்தில் முடிகின்றது.
 - வந்த வழியை மறவாதிருந்தால் எந்த பதவியும் பறிபோகாதாம்.
 - வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்.
 - பட்டம் பதவிக்கு பறக்காதே, அவை தாமே பறந்து வந்து உன் மடியில் விழ வேண்டும்.
 - நல்ல சிந்தனைகள், நல்ல செயல்களாகப் பரிணமிக்கின்றன.
 - பகுதிநேர வேலைகூட, முழுநேர வேலைக்கான படிக்கட்டாக அமையும்.
 - உண்மை உள்ளத்தூய்மையை உண்டாக்கும், உள்ளத்தூய்மையே ஒழுக்கத்தின் உயிர்நாடி.
 - உன் சொற்கள் எப்படியிருக்கிறதோ அந்தளவுக்கு நீ மதிக்கப்படுவாய்.
 - பக்தி என்பது தனிச்சொத்து, கடவுள் என்பது பொதுச்சொத்து.
 - பகைவனை அடக்குபவனைவிட ஆசைகளை அடக்குபவனே மாவீரன்.
 - நீ ஏமாற்றியாக இருந்தால், உன்னை ஏமாளியாக்குவதற்கும் ஒருவனை இறைவன் படைப்பான்.
 
- உண்மையான பெரிய மனிதருக்கு முதல் அடையாளம் பணிவாக இருத்தல்.
 - கடல் போல் செலவழி, ஆனால் எள் முனையளவேணும் வீணாக்காதே.
 - பிறர்க்கு உதவி செய்ய எப்போதும் தயாராக இருங்கள்.
 - நல்ல நண்பனைத் தேடிக்கொள்ளாதவன், தனக்குத் தானே பகைவன்.
 - தொடங்குவதை நன்றாக தொடங்கினால், அதுவே பாதி வெற்றியாகும்.
 - எதிர்காலத்தை திட்டமிடுங்கள், ஏனெனில் அதுதான் உங்கள் வாழ்க்கையில் மீதமுள்ள காலம்.
 - உன் பொறாமையால் மற்றையவர்கள் தாழ்வதில்லை, நீ தான் தாழ்வாய்.
 - ஒரே எண்ணம் உடையவர்கள் சேர்ந்தால், கடலையும் வற்றவைக்க முடியும்.
 - மற்றையவர் கெஞ்சும் போது நீங்கள் மிஞ்சினால் அவர்கள் மிஞ்சும் போது நீங்கள் கெஞ்ச நேரிடும்.
 - இடைவிடாத முயற்சியும் எப்போதும் மலர்ந்த முகமும் அறிவின் அறிகுறிகள்.
 - ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான், அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்.
 - தான் விரும்புவதை எல்லாம் செய்பவன் வல்லவன், தான் செய்வதை விரும்புபவன் அறிவாளி.
 - அன்பு ஒரு முதலீடு. எவ்வளவு போடுகின்றாயோ அதற்கேற்ப நலம் பெறுவாய்.
 - ==============>>>>>> CONTINUED ( தொடர்க )
 
No comments:
Post a Comment