- உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை.
 - உடல் ஒருவனுக்குப் பிறந்தது: நாக்கு பலருக்குப் பிறந்தது.
 - உடைத்த சங்கு ஊத்துப் பறியுமா?
 - உடையவன் பாரா வேலை ஒரு முழங் கட்டை.
 - உட்கார்ந்தால் அல்லவா படுக்க வேண்டும்.
 - உடுத்திக் கெட்டான் பார்ப்பான்; உண்டு கெட்டான் வெள்ளாளன்.
 - உண்ட உடம்பிற்கு உறுதி; உழுத புலத்தில் நெல்லு.
 - உண்டு கொழுத்தால் நண்டு வலையில் இராது.
 - உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும்.
 - உத்திராடத்தில் ஒரு பிள்ளையும், ஊர் வாரியில் ஒரு நிலமும்.
 - உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.
 - உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா?
 
- உரலில் தலையை விட்ட பிறகு உலக்கைக்கு அஞ்சலாமா?
 - உரலுக்கு ஒரு பக்கம் இடி: மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி.
 - உரல் போய் மத்தளத்திடம் முறையிட்டதாம்.
 - உறவு போகாமல் கெட்டது; கடன் கேட்காமல் கெட்டது.
 - உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கலைவானேன்.
 - உலை வைத்த சந்திலே சாறு காய்ச்சுவது போல்.
 - உலோபிக்கு இரட்டை செலவு.
 - உலோபியிடம் யாசித்தல் கடலில் கேணி வெட்டுவது போல.
 - உளவு இல்லாமல் களவு இல்லை.
 - உள்ளூரிலே ஓணான் பிடிக்காதவன் உடுப்பியிலே போயி உடும்பு பிடிப்பானா?
 - உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை.
 - உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குகூட மிச்சமில்லை.
 - ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனை நட்பு இழுக்கும்.
 - ==============>>>>>> CONTINUED ( தொடர்க )
 
No comments:
Post a Comment