- பத்து ஆனாலும் பதற்றம் வேண்டாம், அஞ்சு ஆனாலும் அவசரம் வேண்டாம்.
 - கடந்த காலத்தை எண்ணாமல் நிகழ்காலத்தை சிந்தனை செய்தலே நல்லது,
 - சித்திரை பின் ஏழு, வைகாசி முன் ஏழு சிக்கலான அக்னி நட்சத்திரம்.
 - பணக்காரனும் தூங்கமாட்டான்; பைத்தியக்காரனும் தூங்கமாட்டான்.
 - வேலைக்காரனாய் இருந்து பழகினால்தான் நீ எஜமான் ஆக தகுதி பெறுவாய்.
 - பாத்திரம் அறிந்து பிச்சை போடு. கோத்திரம் அறிந்து பெண்ணைக் கொடு.
 - பலம் பொருந்திய நூறு கைகளை விட ஒரு நல்ல மூளையே சிறந்தது.
 - மனிதர்கள் மழை தடுக்கி விழுவதில்லை. சின்ன சின்ன கற்கள் தடுக்கியே விழுகின்றனர்.
 - ஆண் பிள்ளையை அடக்கி வளர்க்க வேண்டும்; பெண் பிள்ளையை போற்றி வளர்க்க வேண்டும்.
 - செக்கு உலக்கையை விழுங்கினவனுக்கு சுக்கு கஷாயம் மருந்தாகுமா?
 - மனிதனுக்கு அழகு அவனுடைய நாக்கு இனிய சொற்களை மட்டும் பேசுவது.
 - ஒரே ஒரு கோழை, பத்து தைரியசாலிகளையும் கோழையாக்கி விடுவான்.
 
- தலைக்கு மேல் ஓடிய வெள்ளம் சாண் போனால் என்ன? முழம் போனால் என்ன?
 - மனிதனுக்கு மரியாதை அவசியம், மலருக்கு நறுமணம் சொந்தம்.
 - ஈ க்கு விஷம் தலையில், தேளுக்கு விஷம் கொடுக்கில்.
 - தன்னை தானே வெல்பவன், உலகின் தலை சிறந்த வீரனாவான்.
 - மனத் தூய்மையே நேர்மை, மற்றவை எல்லாம் வெறும் கூச்சல்.
 - உடையவன் பொறுத்தாலும், உடையவன் வீடு நாய் பொறுக்காது.
 - மகிழ்ச்சியோடு சுமந்தால் எத்தகைய பாரமும் இலகுவாயிருக்கும்.
 - அறிவுக்குத் தன் வாழ்வை காணிக்கை ஆக்குகிறவன் என்றும் இறப்பதில்லை.
 - மகத்தான சாதனைகள் சாதிக்கப்படுவது வலிமையினால் அல்ல, விடாமுயற்சியினால்.
 - கடைமையும், இந்த நாளுமே நம்முடையது. பயன்களும், எதிர்காலமும் கடவுளுடையது.
 - உழைப்பின்றி உயர்வதாகப் பெருமைப்படாதே, உண்மையான பெருமை உழைப்பில்தான் வருகிறது.
 - மனைவி உனக்காக எதையும் இழப்பாள். எதற்காகவும் உன்னை இழக்கமாட்டாள்.
 - அன்பு ஒரு முதலிடு, எவ்வளவு போடுகின்றாயோ அதற்கேற்ப நயம் பெறுவாய்.
 - ==============>>>>>> CONTINUED ( தொடர்க )
 
No comments:
Post a Comment